தேசிய கட்சிகளில் ஒன்றான மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வரவிருக்கும் மக்க ளவை தேர்தலில் தனித்து களமிறங்கு கிறது. தனித்து போட்டி யிட்டால் பாஜகவிற்கு சாதகமாகிவிடும். அத னால் “இந் தியா” கூட் டணியில் சேர வேண் டும் என பிஎஸ்பி கட்சி யின் மூத்த தலைவர் களும், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சி களும் மாயாவதியிடம் கோரிக்கை வைத்த னர்.
ஆனால் மாயாவதி தனித்து போட்டியிடு வதிலேயே பிடிவாதமாக உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஸ்பி கட்சி யின் முக்கிய தலைவர்கள் பலர் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிக்கு தாவி வருகின்ற னர். கடந்த வாரம் ஷியாம் சிங் எம்பி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலை யில், புதனன்று பிஎஸ்பி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஷா ஆலம் (முபாரக்பூர் தொகுதி) அகி லேஷ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சி யில் இணைந்தார்.