லக்னோ, ஜன. 16 - உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 23 நாட்களில் முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இவர்களைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வந்த தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, பாஜக-வினரின் அதிர்ச்சியை அதிகப்படுத்தினார். தாராசிங் சவுகான் ஞாயிறன்று அகிலேஷ்யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய சவுகான் “2017-ம் ஆண்டு பாஜக அரசு சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற முழக்கத்தை முன்வைத்து வெற்றி பெற்றது ஆனால் வளர்ச்சியின் பலன்கள் சிலருக்கு மட்டுமே கிடைத்தன. “உ.பி-யில் அகிலேஷ் யாதவை மீண்டும் முதல்வராக்குவோம். ஓபிசி மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். மாற்றம் தவிர்க்க முடியாதது,” என்றார். இவரைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அப்னா தள சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.வர்மாவும் ஞாயிறன்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.