states

img

நுபுர் சர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

முகமது நபி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். அவருக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன செய்கிறது. எனவும் மேலும், நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேற்கு வங்கத்திலும் பல இடங்களில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நுபுர் சர்மாவுக்கு  லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.