மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூரில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கை ஈடுபட்டனர்.
இதுவரை ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பராசத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.வெடி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.