states

img

மேற்கு வங்கத்தில் போலி மது அருந்திய 7 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் போலி மருந்து அருந்திய 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் சிலர் நேற்று இரவு போலியான மதுபானத்தை தெரியாமல் குடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, வீட்டுக்குச் சென்றவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 7 பேர் பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.