states

img

கர்பா நடனம், கபடி... இப்போது கிரிக்கெட்... நீதிமன்றத்தை ஏமாற்றி ஆட்டம்போடும் பிரக்யா சிங்!

போபால், டிச.27- மகாராஷ்டிர மாநிலம் மாலே கானில் கடந்த 2008 ஆம் ஆண்டு மசூ திக்கு அருகில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம டைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு இந் துத்துவா பயங்கரவாதிகளின் சதி தான் காரணம் என்று கண்டுபிடித்த மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, இந்துத்துவா பயங்கர வாதிகள் 11 பேரைக் கைது செய்தது. அவர்களில் பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்குரும் ஒருவர். இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.  இதனிடையே, முக்கிய குற்ற வாளியான பிரக்யா சிங் தாக்குர், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி 2017-ஆம் ஆண்டில் மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

அதன்மூலம் 2019 மக்களவைத் தேர்தலில் ம.பி. மாநிலம் போபா லில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யும் ஆனார். ஆனால், மாலே கான் வழக்கில் நீதிமன்றம் நேரில் ஆஜராகச் சொல்லும் போது மட்டும்  தன்னால் நடக்க முடியாது என்று கார ணம் கூறி வந்தார். ஆட்கள் தூக்கிச் செல்லும் பல்லக்கிலும், சக்கர நாற் காலியிலும் வலம் வருவது போல தோற்றம் காட்டினார். ஆனால், பிரக்யா சிங் கடந்த  ஜூலை மாதம் உறவினர் ஒருவரின் திருமண ஊர்வலத்தில் நடனமாடிய தும், அதற்கு முன்னதாக கூடைப்பந்து விளையாடியதும் வீடியோவாக வெளியானது. நவராத்திரியின் போது கர்பா நடனத்திலும் தாக்குர் கலக்கி னார். இதன்பிறகு, அக்டோபர் மாதம் போபாலில் காளி கோவிலில் பெண் களுடன் கபடி ஆடினார். அப்போதே நடக்க முடியாது என்ற பிரக்யா சிங் கூறுவது நாடகம். நீதிமன்றத்தை ஏமாற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது போபா லில் உள்ள ஒரு விளையாட்டு மைதா னத்தில் பிரக்யா சிங் தாக்குர் ‘பேட்’டை பிடித்து கிரிக்கெட்டும் விளையாடி யுள்ளார். இது தொடர்பான புதிய வீடியோ மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.