states

img

8 மாவட்டங்களில் மறுபடியும் ஊரடங்கு நேரம் நீட்டிப்பு!

காவல்துறையிடமிருந்து நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் கொள்ளை

இம்பால், ஆக.5- மணிப்பூரில் வெள்ளிக்கிழ மையன்று இரவு மீண்டும் வன் முறை வெடித்தது. இதில், 3 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த  மூவரும் மெய்டெய் சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் என்ற நிலையில்,  இதற்குப் பதிலடி கொடுக்கும் வித மாக குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கி ரையாக்கப்பட்டுள்ளன. மணிப்பூ ரின் குவாக்டா பகுதியில்தான் இந்  தக் கலவரம் நடந்துள்ளது.  விஷ்ணுபூர் மாவட்டத்தில் இரண்டு ஆயுதக் கிடங்குகளில் ஆயுதங்கள், தோட்டாக்கள் சூறையாடப்பட்ட நிலையில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட 8 மாவட்டங்களி லும் அது வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக இம்பால்  கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊர டங்கு திரும்பப் பெறப்பட்டுள் ளது. முன்னதாக, இந்தப் பகுதி களில் காலை 5 முதல் மாலை 6  மணி வரை தளர்த்தப்பட்ட ஊர டங்கு, தற்போதைய கலவ ரத்துக்கு பிறகு காலை 5 மணி முதல் காலை 10.30 வரை மட் டுமே ஊரடங்கு தளர்வு நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. “மத்தியப் படைகளின் பாது காப்பு வளையத்தில் இருந்த பாது காப்புப் பகுதியில் இருந்து 2 கிலோ  மீட்டர் தொலைவில் இருக்கும் குவாக்டா பகுதிக்குள் கலவரக்கா ரர்கள் நுழைந்தனர். பாதுகாக்கப்  பட்ட பகுதியைத் தாண்டி வந்த  சிலர், மெய்டெய் மக்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி யதைத் தொடர்ந்து மீண்டும் கல வரம் வெடித்தது. இதில் மெய் டெய் சமூகத்தைச் சேர்ந்த மூன்று  பேர் கொல்லப்பட்டனர். குக்கி சமூ கத்தினர் வீடுகள் பல எரிக்கப்பட்  டுள்ளன. சம்பவ பகுதியில் போலீ சார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று  விஷ்ணுபூர் காவல்துறை தெரி வித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் மூன்று காவலருக்கு முகத்தில்  காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இம்பால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

ஒரே இடத்தில் அடக்கம் அறிவிப்பால் மீண்டும் பதற்றம்

மணிப்பூர் கலவரத்தில் உயிரி ழந்த குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 35 பேரின் உடல்களை ஒரே  இடத்தில் அடக்கம் செய்ய திட்ட மிடப்பட்டது. இந்த அறிவிப்பால்  கடந்த சில நாட்களாக மணிப்பூரில்  மீண்டும் பதற்றம் அதிகரித்தது. இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களின் அண்டை மாவட்  டங்களில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கத் தொடங்கின.  இதனொரு பகுதியாக விஷ்ணுபூர் மாவட்டத்தில்  உள்ள காங்வாய், பூகாக்சாவ் பகுதிகளில் நடந்த போராட்டங் களில் வியாழனன்று கலவரம் வெடித்தது. போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி  போராட்டக்காரர்களை கலைத்த னர். குக்கி - மெய்டெய் சமூகத்தின ருக்கு இடையே நடந்த போராட்  டத்தில் 25 பேர் படுகாயமடைந்த னர். மெய்டெய் சமூகப் பெண்கள்  சோதனைச் சாவடியைத் தாண்டி  நுழைய முயன்றதால் பாது காப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்கு தல் நடத்தியதாக தெரிகிறது

ஆயுதக் கிடங்கில் கொள்ளை

இதனிடையே விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள இந்திய  ரிசர்வ் பட்டாலியன் தலைமைய கத்திற்கு 40 வாகனங்களில் வந்த  சுமார் 500 பேர், 298 ரைபிள் துப் பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், 327 சிறிய பீரங்கி குண்டுகள், 20  கையெறி குண்டுகள், ஏகே மற்றும்  ‘கடக்’ ரக தாக்குதல் துப்பாக்கி கள் 4, தானியங்கி துப்பாக்கிகள் 195, எம்பி-5 வகை துப்பாக்கி கள் 5 என பல்வேறு ரக துப்பாக்கி களுடன் 19,000-க்கும் மேற்பட்ட  தோட்டாக்கள், 124 கையெறி  குண்டுகள், கவச உடைகள் உள்  ளிட்டவற்றை கொள்ளைய டித்துச் சென்றனர். இதேபோல், தலைநகா் இம்பாலில் உள்ள ஆயுதக் கிடங்குகளிலும் கொள்ளை  முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவை முறியடிக்கப் பட்டதாக அதிகாரிகள் கூறினா். இதையடுத்து, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக இம்  பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் முழு  ஊரடங்கு உத்தரவு அமல்படுத் தப்பட்டது. பாதுகாப்புப் பணி யில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு  வந்தனர். 7 சட்டவிரோத பதுங்கு  குழிகள் அகற்றப்பட்டதாக போலீ சார் தெரிவித்திருந்தனர். முன்ன தாக குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 35 பேரின் உடல்களை ஒரே  இடத்தில் அடக்கம் செய்யும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. இந்நிலையில்தான், மணிப்பூ ரில் வெள்ளிக்கிழமையன்று இரவு மீண்டும் வன்முறை வெடித்ததில்,  3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்ப வம் நடந்துள்ளது.