இம்பால், ஜன. 20- காங்கிரஸ் முன்னாள் தலை வரும், எம்பியுமான ராகுல் காந்தி “இந்திய ஒற்றுமை நியாய யாத் திரை”யை மேற்கொண்டு வரு கிறார். இந்த யாத்திரை மணிப்பூரை கடந்து 3 நாட்களுக்கு முன் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நுழைந்த நிலையில், வெள்ளி யன்று இரவு லக்கிம்பூரில் யாத் திரை வாகனங்கள் மீது பாஜக வின் இளைஞர் அமைப்பான பார திய ஜனதா யுவ மோர்ச்சா அமைப் பின் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து ராகுல் காந்தி உருவம் அச்சிடப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களையும் கிழித் தெறிந்துள்ளனர். இந்த சம்ப வத்திற்கு பாஜக மீது காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறுகை யில், “இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை வன்மையாக கண் டிக்கிறோம். பாஜகவின் இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் தந்தி ரத்திற்கு காங்கிரஸ் கட்சி பயந்து விடாது” என தெரிவித்துள்ளார்.