மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பட்லாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயது சிறுமிக்கு, பள்ளியின் காவ லாளி பாலியல் தொந்தரவு கொடுத் துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டாலும், அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய் யப்படவில்லை.
இந்நிலையில், பாலியல் துன்புறுத்த லில் ஈடுபட்ட காவலாளி மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பட்லாப்பூர் ரயில் நிலை யத்தில் சிறுமியின் பெற்றோர், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பிறகு காவலாளி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போக்சோ வழக்காக பதிவு செய்யாத காவல் ஆய்வாளருக்கு பணியிட மாறுதலும், பள்ளியின் முதல்வர் தற்காலிக இடைநீக்கமும் செய்யப் பட்டுள்ளார்.