states

img

மும்பை: ஒரே பள்ளியில் 18 மாணவர்களுக்கு கொரோனா

மும்பையில் ஒரே பள்ளியில் பயிலும் 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மகாராஷ்டிரா நேவி மும்பையில் பள்ளியில் படித்து வரும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சமீபத்தில்தான், அவர் கத்தாரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து, ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர். தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியானபோதிலும், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து டிசம்பர் 13ஆம் தேதி, மகன் படிக்கும் பள்ளியில் பல மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஏழு பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பள்ளியில் சுமார் 650 மாணவர்களிடம்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், முன்னதாக உறுதி செய்யப்பட்ட ஏழு மாணவர்கள் உள்பட 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 
மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 902 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் எட்டு பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;