புனே அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனி கல்போர் கிராமத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை 4 பேர் இன்று காலை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கி 4 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து லோனி கல்போர் காவல் நிலையத்தின் அதிகாரி கூறுகையில், முதல் இருவர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அவர்களை காப்பாற்ற மேலும் இருவர் தொட்டிக்குள் இறங்கி காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் 4 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின்படி, கடந்த 10 ஆண்டுகளில் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.