பெங்களூரு, டிச.15- பள்ளியில் மதிய உணவில் பார பட்சம் காட்டும் பாஜக அரசின் முடிவை கண்டித்து கர்நாடகாவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர் சாதியினரின் புகார்களைத் தொடர்ந்து மதிய உணவுப் பொருட்களில் இருந்து முட்டையை அரசு விலக்கி உள்ளது. இதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் கண்டனமும், அது நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவியின் அனல் பறக்கும் பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலானது. கங்காவதி தாலுகாவில் உள்ள எம்என்எம் மேல்நிலைப் பள்ளி மாணவி அஞ்சலி. இவர் எஸ்எப்ஐ கிளையின் கமிட்டி உறுப்பினர். சக மாணவர்களி டம் இவர் பேசுகிறார்: “முட்டையைச் சேர்க்காவிட்டால் நாம் அனைவரும் இறந்துவிடுவோம். நாம் இறப்பது நல்லதா அல்லது முட்டைகள் கெடுவது நல்லதா? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இல்லை என்றால் போராட் டத்தை தொடர்வோம். எங்களில் யாரைக் கொன்றாலும் கேட்கவும் சொல்லவும் ஒரு இயக்கம் இருக்கிறது, அது நமது இந்திய மாணவர் சங்கம். எங்களுடன் விளையாடுவதை நிறுத்துங்கள், இல்லையென்றால் நாங்கள் உங்கள் மடங்களுக்கு வந்து முட்டை சாப்பிடுவோம். அது தேவையா? எங்களுக்கு முட்டையும் வேண்டும் பழமும் வேண்டும். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்? எங்களுடைய பணத்தில் தின்று கொழுத்தீர்கள் அல்லவா? அந்த பணத்தையெல்லாம் திரும்பக் கொண்டுவா. நாங்கள் அரசுப் பள்ளிக ளில் படிக்கிறோம் என்றால் வீட்டில் அந்த அளவுக்கு பட்டினி கிடப்பதால் தான். நாங்கள் வருவோம்,
மடத்தின் முன்னால் வந்து நிற்போம். நாங்கள் தனியாக இருப்பதாக நினைக்காதீர் கள். நாங்கள் நினைத்தால் இந்த கங்காவதி தாலுக்கா முழுவதும் திரண்டு வரும். இந்த மடமே மிச்சமி ருக்காது. எங்கள் இயக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த அளவுக்கு எங்களிடம் நிறைய மாணவர்கள் உள்ளனர்.’’ - இது அஞ்சலியின் பேச்சு. இந்த உரை இடம் பெற்றுள்ள வீடியோவை இந்திய மாணவர் சங்க அகில இந்திய தலைவர் வி.பி. ஷானு உள்ளிட்டோர் பகிர்ந்துள்ளனர். எம்என்எம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் அஞ்சலி . முன்னதாக, கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக் கான பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.