பெங்களூரு, ஜூன் 25 - கர்நாடகத்தில் ஹிஜாப், கலால், பாங்கு ஒலிபெருக்கி பிரச்சனைகளைக் கிளப்பி மதவன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில், மத வன்முறையைத் தூண்டுப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம் மைக்கு, ஒய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி காரிகள், எழுத்தாளர்கள் உள்பட 75 ஆளு மைகள் பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர். வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்லப்பரெட்டி, மாநில அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர் மகுமார், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சிரஞ்சீவ்சிங், ரகுநந்தன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அஜய்குமார் சிங், எழுத் தாளர்கள் சசி தேஷ்பாண்டே, வைதேகி, திரைப்பட இயக்குநர் கிரீஷ் காசரவள்ளி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ள இந்த கடிதத்தில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தில் சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்துப் பேச முதல்வர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து கடிதம் வழங்க முயற்சி செய்தோம். ஆனால் முதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. அதனால் நாங்கள் இந்த கடிதத்தை பகிரங்கமாக எழுதியுள்ளோம்.
கர்நாடகத்தில் சமீபகாலமாக சிறு பான்மையினர் மீது நடைபெறும் தாக்கு தல்கள் மற்றும் விவாதங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இத்தகைய விஷயங்கள் கர்நாடகத்தின் அமைதி, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பன் முகத் தன்மையை அழிப்பதாக உள்ளது. கர்நாடகம் புதுமைகளை புகுத்துதல் மற்றும் புதிய விஷயங்களை உருவாக்கு வதில் புகழ் பெற்று திகழ்கிறது. ஆனால் சமீப காலமாக சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பட்டியல் வகுப்பினர் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும், கர்நாட கத்தின் பெருமையை சீர்குலைப்பதாகவும் உள்ளது. சாதி-மதத்தின் பெயரில் மக்களை தாக்குவது, வன்முறைகளை தூண்டிவிடு வது, வெறுப்பு கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துவது சரியல்ல. அரசியல் சாசனப் பதவியில் இருப்பவர்களே இவ்வா றான கருத்துகளை கூறுவது என்பது அர சியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது.
அவர்கள் வன்முறையை தூண்டுபவர்க ளை ஆதரிக்கிறார்கள். வெறுப்புக் கருத்துக்களை, வன்முறையை அங்கீகரிக் கிறார்கள். சொத்துக்களை கட்டாயமாக எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் அந்த சமூகங்களின் மக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கி றார்கள். இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்த லாக உள்ளது. ஒரு தரப்பு மக்கள் அச்ச மான சூழ்நிலையில் வாழும் நிலையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. எனவே, முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட்டு, மத ரீதியான பிரச்சனைகளைத் தூண்டி விடுபவர்கள் மீது உடனடியாக கடும் நட வடிக்கை எடுக்கும்படி கூற வேண்டும். சட்டத்தை நிலைநாட்டி அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக கீழ்நிலையில் உள்ள மக்களை பாதுகாக்க வேண்டும். மதக் கலவரங்கள் நடந்தால் அதற்கு காரணமான உள்ளூர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.