states

img

மூடா வழக்கு சித்தராமையா மனு தள்ளுபடி

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முனைப் ்பில் பாஜக, மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் அம் மாநில முதல்வர் சித்த ராமையா தனது மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறை கேடு நடந்துள்ளது என சமூக ஆர்வலர் மூலம் ஆளுநரிடம் புகார் மனு அளித்தது. அடுத்த சில நாட்களி லேயே, அதாவது கடந்த ஆகஸ்ட் 16 அன்று முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கினார். தன்மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி பிறப் பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முதல்வர் சித்தராமையா ஆகஸ்ட் 19 அன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி நாக பிரசன்னா தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். 

இந்நிலையில், செவ்வாயன்று நீதிபதி நாக பிரசன்னா அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில்,“தனிநபர் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எனவே மூடா விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அளித்த ஒப்புதலை ரத்து செய்ய கோரிய சித்தராமையா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கர்நாடக முதல்வரை விசாரிக்க எவ்வித தடையும் இல்லை” என கூறப்பட்டுள்ளது.