பெங்களூரு, ஜன.19- சிஐடியு 17- ஆவது அகில இந்திய மாநாடு ஜன-18 முதல் பெங்களூரில் நடைபெற்றுவருகிறது. மாநாடு நடைபெற்றுவரும் பேலஸ் கிரவுண்ட் காயத்திரி விகார் வளாகத்தில் தோழர் விமலா ரணதிவே நினைவாக புகைப்படம் மற்றும் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை சிஐடியு தலைவர் டாக்டர் ஹேமலதா, பொதுச்செயலாளர் தபன்சென் ஆகியோர் திறந்துவைத்தனர். எழுத்தாளர்கள் கல்புர்கி, கெளரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் புகைப்பட கண்காட்சியை துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் திறந்துவைத்தார். தேசாபிமானி புத்தக கண்காட்சியை மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் அமனுல்லாகான் திறந்துவைத்தார். நவதெலுங்கானா புத்தக கண்காட்சியை சிஐடியு மத்தியக் குழு உறுப்பினர் கே.என்.உமேஷ் திறந்துவைத்தார்.
கர்நாடக பிரீத்திபதா புத்தக கண்காட்சி மற்றும் தொழிற்சங்க போராட்ட வரலாறு புகைப்பட கண்காட்சியை பொதுச்செயலாளர் தபன்சென் திறந்துவைத்தார். எழுத்தாளர்கள் கல்புர்கி, கெளரிலங்கேஷ், கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் புகைப்பட கண்காட்சி யில் ஜெர்மனியில் ஹிட்லர் 1933-1945ஆம் ஆண்டுகளில் யூதர் களை 1 கோடியே 10 இலட்சம் பேரை கொன்று குவித்த வர லாறு குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. தொழிற்சங்கப் போராட்ட வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியில் கர்நாடகாவில் கோலார் தங்க வயல் கேஜிஎப் சுரங்க தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டம், தொழிலாளர் பாதுகாப்பு போராட்டம் குறித்தும் நில உரிமைக்கான போராட்டம், தொழிலாளர்களுக்கு 8 மணிநேர வேலையை உறுதிப்படுத்துவதற்கான போராட்டம் குறித்து புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மாநாட்டு பிரதிநிதிகள், போராட்ட உணர்ச்சியூட்டும் புகைப்பட கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.