மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (ஜேடிஎஸ்) தலைவரும், முன் னாள் பிரதமருமான தேவகவுடா வின் பேரனான ஹாசன் தொகுதி எம்பி யுமான பிரஜ்வல் ரேவண்ணா தனது அர சியல் அதிகாரத்தை வைத்து 300 பெண் களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3000க்கும் மேற்பட்ட வீடியோ தொகுப்பு ஏப்ரல் 25 அன்று கசிந்தவுடன், அவர் வெளி நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசார் ரெட் மற்றும் புளூ கார்னர் நோட்டீ ஸூடன் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந் நிலையில், பாலியல் பலாத்காரம் மற்றும் பலாத்காரம் செய்த பெண்ணை கடத்தியது தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா கடந்த வாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா வின் பாலியல் வீடியோக்களை ஜேடிஎஸ்-ஸின் கூட்டணி கட்சியான பாஜகவே பரப்பி வருகிறது. 4 நாட்களுக்கு முன் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ வெளியிட்டது தொடர்பாகவும், உதவி கேட்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தாகவும் ஹாசன் மாவட்ட பாஜக நிர்வாகி தேவராஜ கவுடாவை கர்நாடக சிஐடி போலீ சார் கைது செய்தனர். இதே போன்று பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் பலாத்கார வீடியோவை பொதுவெளியில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்தன் லிகித் கவுடாவை கர்நாடக சிஐடி போலீசார் கைது செய்து, இருவரின் வீட்டிலிருந்து ஆபாச வீடியோ கிளிப்கள் அடங்கிய இரண்டு பென் டிரைவ்கள் மற்றும் கணினி களை கைப்பற்றினர்.
கூட்டணிக் கட்சியின் பாலியல் விவகா ரம் என்று கூட பாராமல் பிரஜ்வல் ரேவண் ணாவின் பாலியல் விவகாரத்தை அரசி யல் ஆதாயப் பொருளாக கையிலெடுத்து பாஜகவினர் அதனை பரப்பி வரும் சம்ப வத்தால் ஜேடிஎஸ் கட்சி கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாயை பலாத்காரம் செய்து, மகளை நிர்வாணப்படுத்திய பிரஜ்வல்
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவ காரம் தொடர்பாக இதுவரை 700க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலை யில், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் ஒருவர்,”தனது தாயை பலாத்காரம் செய்து, தன்னை நிர்வாணப் படுத்தி கொடுமைப்படுத்தினார்” என புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,”கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் எனது தாயை பிரஜ்வல், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் பலாத்காரம் செய்தனர். மேலும் பிரஜ்வல் வீடியோ காலில் அழைத்து என் ஆடைகளை கழற்றக் கூறி துன்புறுத்துவார். நான் மறுத்தபோது, என்னையும், என் தாயை யும் மிரட்டினார். மேலும் தான் கூறியபடி ஒத்து ழைக்காவிட்டால் கணவரின் வேலையை பறித்து விடுவேன் என்றும், மகளை பலாத் காரம் செய்துவிடுவேன் என்றும் பிரஜ்வல் மிரட்டினார்” என அவர் கூறினார். இந்த விவ காரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.