states

img

புதுவையில் ஆசிரியர் காலிப்பணியிடம் உடனடியாக நிரப்பப்படும்: முதல்வர்

புதுச்சேரி,செப்.5- புதுச்சேரியில் காலி யாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுகப் படும் என்று முதல்வர் ரங்க சாமி தெரிவித்தார். புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் 3 தினவிழா விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் திங்க ளன்று(செப்.5) கொண் டாடப்பட்டது.  விழா வில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, நல்லாசி ரியர்களுக்கான விருது களையும், பணி ஓய்வூபெற்ற ஆசிரியர்களுக்கு ஆடை அணிவித்து, சான்று வழங்கியும் பாராட்டினார்.  பிறகு அவர் பேசுகை யில், “புதுச்சேரியில் அனை வருக்கும் கல்வி என்ற உன்னத நோக்கத்தோடு இல வசமாக கொடுத்து வரு கிறோம். ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்கு டன் தீர்த்து வைக்கப்படு கிறது. ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப அரசு  சார்பில் நடவக்கை எடுக்கப் பட்டுள்ளது” என்றார். இவ்விழாவிற்கு வரு கைதந்த சிறப்பு விருந்தி னர்களையும், ஆசிரியர், மாணவர்களை  மாவட்ட ஆட்சியர் வல்லவன் வரவேற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  தலைமை விருந்தினாராக பங்கேற்றார்.  விழாவில் சட்டப் பேரவைத் தலை வர் ஆர். செல்வம்,  அமைச்சர் சாய் ஜெ. சர வணன்குமார்,சட்டமனற் உறுப்பினர்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், கல்வித் துறை இயக்குநர் ருத்ர கௌடு, ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;