states

விவசாயிகளுக்கு மானியம்

புதுச்சேரி, மார்ச் 4- தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு மானியம் வழங்கும் விழாவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசின் வேளான் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வெற்றிலை சாகுபடி, மலர் சாகுபடி, நாட்டு காய்கறிகள், பழப்பயிர்கள் மற்றும் வாசனை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ஒரு சென்டுக்கு 1,500 ரூபாயும், ஒரு ஹெக்டேருக்கு 50,000 ரூபாய்க்கு மிகாமல் வழங்கும் திட்டத்தில் கீழ் மானியம் வழங்கும் விழா வெள்ளியன்று (மார்ச் 4) சட்டப்பேரவையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்சாமி கலந்து கொண்டு ரூ.32,77,277க்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் வேளான் அமைச்சர் ெஜயக்குமார், வேளான்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.