புதுச்சேரி, மார்ச் 14- புதுவையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் வகுப்புகள் திங்களன்று (மார்ச் 14) திறக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுவை மாநிலத்தில் 2020இல் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தொற்று குறையும் போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும், அதிகரிக்கும்போது மூடப்பட்டும் வந்தன. 3ஆவது அலை பரவல் குறைந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் 2020 முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் வெகுவாக குறைந்த தால் மழலையர் பள்ளிகளை திறக்க அரசு அறிவித்தது. அதன டிப்படை யில் அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளி கள் திறக்கப்பட்டன. காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 2 ஆண்டுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டாதால் பல குழந்தை கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த ஆசிரியர்கள் கிருமிநாசினி வழங்கி வகுப்பறைக்கு அனுப்பினர். சில குழந்தைகள் பள்ளிக்கு வர மறுப்பு தெரிவித்து பெற்றோரை விட்டு அகலவில்லை. அவர்களுக்கு சாக்லேட், பென்சில் போன்ற பரிசு பொருட்களை கொடுத்து சமாதானம் செய்து ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.