states

img

பணம் இருந்தால் தான் மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் புதுவை கருத்தரங்கில் தலைவர்கள் பேச்சு

புதுச்சேரி, மார்ச் 5- பணம் இருந்தால் மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல் என்று அகில இந்திய மின்சார பொறியாளர் சம்மேள னத்தின் தலைமை புர வலர் கே.அசோக் ராவ் தெரி வித்தார். மின்சாரம் பொது சேவைக்கானதா?, நகர்வுப் பொருளா?, தனியார்மயம் தேவையா? ஆகிய தலைப்பு களில் புதுச்சேரி அரசு ஊழி யர் சங்கங்களின் சம்மேள னம், அறிவியல் இயக்கம் ஆகியவற்றின்  சார்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. சம்மேளன பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு  அசோக் ராவ் பேசுகையில், உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்பது எப்படி அடிப்படை உரிமையோ, அது போல் மின்சாரம் என்பதும் அனைவரது அடிப் படை உரிமை. மின்சாரம் இன்றைக்கு அத்தி யாவசியத் தேவையாக மாறி விட்டது. நாட்டின் அனைத்து வளங்களையும் சூறையாடுவதற்காக 1991ஆம் ஆண்டு உலக வங்கியின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதார கொள்கை நாட்டில் அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் சேவைத் துறையாக இருக்கும் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி யில் ஒன்றிய அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தில் மக்களின் அடிப்படையாக உள்ள சேவைத் துறைகளை வணிக மயமாக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

அதற்கு நேர்மாறாக தற்போது அனைத்து சேவைத் துறைகளையும் தனி யார்மயமாக்கும் நடவடிக் கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் 2022 புதிய மின்சார வரைவு மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதாவில் விவ சாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை, எளிய மக்களுக்கு உத்திர வாதமான மின்சாரம் என்ப தெல்லாம் கேள்விகுறியாக உள்ளது. இதை எதிர்த்து தான் விவசாயிகளின் நாடு தழுவிய அளவில் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் நாம் வரிசையில்நின்று வாக்களித்தது எதற்காக நாட்டின் வளங் களை எல்லாம் தனியார் மயமாக்கவா? என கேள்வி எழுப்பி னார். மின்துறை தனியார் மயமானால் மின் கட்டணம் பன்மடங்கு உயரும் ஆபத்து உள்ளது. பணம் இருந்தால் மின்சாரம் என்பது மக்களின் அடிப் படை உரிமையை பறிக்கும் செயல். எனவே பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பான மின்துறை சொத்துக்களை தனியாருக்கு மடைமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. இதற்கெதிராக அனைவரையும் ஒன்று திரட்டி போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதில் பொறியாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் டி.ஜெயந்தி, அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.பார்த்தசாரதி, சம்மேளன கவுரவத்தலைவர் பிரேம தாசன், தலைவர் ரவிச்சந்திரன் நிர்வாகிகள் கிறிஸ்டோபர், ரமேஷ், மாறன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.