states

img

புதுச்சேரியில் கட்டற்ற மென்பொருட்கள் கண்காட்சி

புதுச்சேரி,செப்.26- கட்டற்ற மென்பொருட்கள்  காட்சிப்படுத்தும் வகையில் (சாப்ட்வேர்  பிரிடம் தினம்) ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புதுச்சேரி பெத்திசெமினார் மேன்நிலைப் பள்ளியில் கட்டற்ற மென்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.  இக்கண்காட்சிக்கு புதுச்சேரி கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் தலைவர் ராகுல் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதாசுந்தரராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தார்.  தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் சார்பில் “டிஜிட்டல் விளம்பரங்களை தடுப்பது எப்படி?” என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. புதுச்சேரி அறிவியல் இயக்க நிர்வாகிகள் பாலூ, விஜயமூர்த்தி, தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் தலைவர் பிரசன்னா,புதுச்சேரி நிர்வாகி கமல் உள்ளிட்ட திரளானோர் கண்காட்சியில் பங்கேற்றனர்.

;