states

img

அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் புதுவை அரசுக்கு வலுக்கும் கண்டனம்

புதுச்சேரி,ஜூலை 30- அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு கண்ட னம் வலுத்து வருகிறது. இரண்டு ஆண்டுகாலமாக உல கையையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றால் மக்க ளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்னும் அந்த வைரஸ் நம்மை அச்சுறுத்தி வரும் நிலையில், மாண வர்களின் கற்றல் திறமை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. தனி யார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக் கட்டணத்தால் ஏராள மான மாணவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். கொரோனா வால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். அரசுப் பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது மட்டுமல்ல, இனி அரசுப் பள்ளிகளை நாம்தான் பாது காக்க வேண்டும் என்ற கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.  இத்தகைய சூழ்நிலையில் தான் புதுச்சேரி என்.ஆர்.காங்கி ரஸ்,பாஜக கூட்டணி அரசு தனது பொறுப்பை மறந்து அரசுப் பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு களை மேம்படுத்துவதற்கு மாறாக பாரம்பரிமிக்க லாஸ்பேட்டையில் உள்ள வேங்கடசுப்ப தொழிற்பள்ளி என்று அழைக்கபடும் (ஜெ.டி.எஸ்) பள்ளி மற்றும் இந்திரா நகரில் உள்ள இந்திரா காந்தி அரசு மேனிலை பள்ளிகளுக்கு மூடுவிழா காணும் நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி நகரம் மிஷன்வீதியில் உள்ள பான்சியோனா பிரெஞ்ச்பள்ளியை மூடுவதற்கு முயற்ச்சித்தபோது பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தி யில் அம்முடிவை அரசு கைவிட்டது.
இந்திய மாணவர் சங்கம்
அரசுப் பள்ளிகளில் மாணவர்க ளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என காரணம் கூறி, அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் புதுச்சேரி அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, மகளிர் தொழிற்நுட்ப கல்லூரியை பொறி யியல் கல்லூரியாக மாற்றப் போகிறோம். கல்வித் தரத்தை உயர்த்த போகிறோம் என்று கூறி தொழிநுட்ப கல்லூரியை நம்பி யிருந்த ஏழை-எளிய மாணவிகளின் கல்விக்கும் மாநில அரசு வேட்டு வைத்துள்ளது.  பொறியியல் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத நடுத்தர வர்கத்தை சார்ந்த ஏழை எளிய மாணவிகளின் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் கேள்விக்குறியாக்குவது ஏற்புடையதல்ல என்றும் மாணவர் சங்கத்தின் பிரதேச செயலாளர் பிரவீன்குமார் தெரிவித்திருக்கிறார். அரசுப் பள்ளிகளை மூடும் நட வடிக்கைகளை கைவிட்டு, பள்ளியை பாதுகாக்க வேண்டும், பாரம்பரியமிக்க பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும், இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், தரமான மதிய உணவு வழங்க வேண்டும், இலவச பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்வித்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இதேபோல், தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.