பீகார் மாநிலம் புஷ்வாரி ஷெரீப் பகுதியில் உள்ள இந் துனி பதார் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுமிகள் மாட்டுச்சாணம் சேகரிக்கச் சென்ற னர். அதன்பின் அவர்கள் வீடு திரும்பாத நிலையில், குடும்பத்தி னர் மற்றும் உறவினர்கள் பல் வேறு இடங்களில் காணாமல் போன சிறுமிகளைத் தேடினர்.
இதையடுத்து காவல் நிலை யத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்த நிலை யில், செவ்வாயன்று இரண்டு சிறுமிகளும் வயல் பகுதியில் கேட்பாரற்று கிடந்தனர். தகவல றிந்த போலீசார் சிறுமிகளை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத் துவமனையில் அனுமதித்தனர்.
இரு சிறுமிகளும் 3-க்கும் மேற் பட்டோரால் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வும், ஒரு சிறுமி ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், மற் றொரு சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்து வர்கள் கூறினர்.
இதனை அறிந்த தலித் சிறுமியின் பெற்றோர்கள் கதறி துடித்தனர். குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும் பத்தினருடன் கிராம மக்கள் நீதி கேட்டு புல்வாரி ஷெரீப் பகுதி யில் போராட்டம் நடத்தி வருகின்ற னர். குற்றவாளிகளை கைது செய் யும் வரை போராட்டம் தொடரும் என இந்துனி பதார் மக்கள் அறி வித்துள்ளனர்.