வதந்தி பரப்பியோரின் வங்கிக் கணக்கை முடக்கப் பரிந்துரை
தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கூறினார். அவர் மேலும் கூறுகையில், ட்விட்டர், யூ டியூப், பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோக்களை தடை செய்ய வழக்குப்பதிவு செய்து யூ டியூப் மற்றும் ட்விட்டர் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளோம். பணம் சம்பாதிக்க, பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளோம். ஞாயிறு மாலைக்குள் அவர்கள் கணக்கு முடக்கப்பட்டு விடும். கட்டுப்பாட்டு அறைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இங்குள்ள நிலைமைகள் குறித்து மட்டும் கேட்டறிந்தனர். தாக்குதல், கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றதாக யாரும் தெரிவிக்கவில்லை. புகார் இதுவரை பெறப்படவில்லை என சசாங் சாய் தெரிவித்தார்.
திருப்பூர், மார்ச் 5- தமிழ்நாட்டில் குறிப்பாக, திருப்பூரில் வடமாநிலத் தொழி லாளர்கள் குறிவைத்து தாக்கப்படு வதாக தகவல் பரவிய நிலையில், வதந்தியை கட்டுப்படுத்தவும், பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் பணிகள் மிகவும் திருப்திகரமாக உள்ளதாக பீகார் மாநில அரசின் உயர்மட்ட குழுவினர்தெரிவித்தனர். பீகார் மாநில அரசின் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை செய லர் பாலமுருகன், காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு ஐ.ஜி கண்ணன், தொழிலாளர் துறை ஆணையர் அலோக்குமார் மற்றும் சிறப்பு அதி ரடிப்படை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குப்தா ஆகியோர், தமிழ்நாட்டில் உள்ள நிலைமைகள் குறித்து நேரில் ஆய்வு செய் வதற்காக வந்திருந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், பீகாரை பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடனும், திருப்பூர் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதன் பிறகு பீகார் அரசு உயர் மட்டக்குழு சார்பில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை செயலர் பால முருகன் செய்தியாளர்களிடம் கூறு கையில், சென்னையில் சனிக்கிழமை யன்று மூத்த அரசு அதிகாரிகள், சென்னை மாவட்ட அதிகாரிகள் மற்றும் பீகாரிகள் உள்ள தொழில், வர்த்தக அமைப்பினர் உள்ளிட்ட வர்களை சந்தித்து பேசினோம். இன்றைய தினம் (ஞாயிறன்று) திருப்பூருக்கு வருகை தந்து இங்குள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்தோம். இதில், கோவை யில் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட சம்பவத்தையும், வேறு பகுதியில் நடைபெற்ற சம்பவங்களையும் வைத்து பொய்யான வீடியோக் களை இணையதளத்தின் மூலம் பரப்பி உள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டு தாக்குதல் நடத்துவது உண்மையா என்று பயம் பீதி ஏற்படுத்தப்பட்டது.
மார்ச் 1 ஆம் தேதி முதல் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கைகள், புலம்பெயர்ந்து வந்திருக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, பொய்யான வதந்தியை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுப்பது, இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சிறப்பு பிரிவு, தனி உதவி மையம் ஏற்படுத்தி இருப்பது ஆகியவற்றை பற்றி எடுத்துக் கூறினர். தமிழ்நாடு அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் இயல்பு நிலையை பாதுகாக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதைத்தொடர்ந்து பீகார் தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய ஆலைகளிலும் நேரில் சென்று விசாரிக்க உள்ளோம். இங்கு உள்ள உண்மை நிலைமை கள் குறித்து பீகார் அரசுக்கு அறிக்கை அளிப்போம். இவ்வாறு பாலமுருகன் கூறினார். தமிழ் மொழியில் பேட்டியளித்த அவர், பின்னர் இதே விஷயத்தை இந்தியிலும் கூறினார். இதை வீடியோ வில் பதிவு செய்து ஒளிபரப்ப கேட்டுக் கொண்டார். முன்னதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு ஆகியோர், திருப்பூரில் பொய்யான வதந்தியை பரப்பு வோர் மீது மேற்கொண்டுள்ள நட வடிக்கைகள் குறித்தும், பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் தனி உதவி மையம் அமைத்திருப்பது பற்றியும் விளக்கினர்.