வெள்ள நீரால் ஏற்படும் சேதத்திலிருந்து கால்நடைகள் மற்றும் பயிர்களை பாதுகாக்க பருவமழைக்காலத்திற்கு முன்பே சட்லஜ், காகர், பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநிலக் குழுவின் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் கொட்டும் மழையில் பேரணியாக சென்று பஞ்சாப் துணை ஆணையர்கள் மூலம் பஞ்சாப் முதலமைச்சருக்கு மனுவை அனுப்பி வைத்தனர்.