states

img

நாட்டின் 26 கோடி குடும்பங்களிடம் தலா 1 லட்சத்தை ‘பறித்த’ மோடி அரசு!

ப. சிதம்பரம் கேள்வி

புதுதில்லி, ஏப். 4 - “ஒன்றிய பாஜக அரசு, கடந்த எட்டு ஆண்டுகளில் எரிபொருள் வரியாக 26 லட்சம் கோடி ரூபாயை வசூலித்த நிலையில், அதற்கு ஈடாக மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தது?” என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம்  நிறைவடைந்த நிலையில், நரேந்திர  மோடி அரசு மீண்டும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்  விலைகளை உயர்த்த ஆரம்பித்துள் ளது. கடந்த 14 நாட்களில் 12 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 108 ரூபாய் 96 காசுகளாக உயர்ந்துள்ளது. டீசல் விலை 99  ரூபாய் 04 காசுகளாக உயர்ந்துள் ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 டாலராக உள்ளது.

இந்த விலை அதிக மாற்ற மின்றியே தொடருகிறது. எனினும் மோடி அரசு ஒவ்வொரு நாளும் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இந்நிலையில், பாஜக அரசு அமைந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எரிபொருள் வரியாக 26  லட்சம் கோடி ரூபாயை வசூ லித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலை வருமான ப. சிதம்பரம் தெரி வித்துள்ளார். “கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரிகளாக மக்களி டம் இருந்து ரூ. 26 லட்சத்து 51 ஆயி ரத்து 919 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது, ஒவ் வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக தலா ரூ. 1 லட்சத்தை அரசு வசூல் செய்துள்ளது. ஒரு சராசரி குடும்பத்திற்கு, இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன பெற்றுள்ளோம் என மக்கள் தங்களுக்குத் தாங்களே கேள்வி எழுப்பிப் பாருங்கள்..” என்று டுவிட்டர் பதிவில் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.