states

img

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டைப் பயன்படுத்துவதா? - ஜி.சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்

பிரதமர் மோடி அண்மையில் அரசு முறைப்  பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்களில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை மாளிகை ஒரு ஃபேக்ட் ஷீட் (Fact Sheet)ஐ வெளியிட்டுள்ளது. அதில்  ‘அடுத்த தலைமுறை பாதுகாப்பு கூட்டாண்மை’ எனும் தலைப்பின் கீழ் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருந்தது: “அமெரிக்க கடற்படை காட்டுப்பள்ளியில் (சென்னை) உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ(L&T)  கப்பல் கட்டும் தளத்துடன் கப்பல் பழுதுபார்ப்பு  ஒப்பந்தத்தை (Master Ship Repair Agreement (MSRA)) முடித்துள்ளது; மேலும், மசாகான் டாக் லிமிடெட் (மும்பை) மற்றும் கோவா  கப்பல் கட்டும் தளம் (கோவா) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறது.  இந்த ஒப்பந்தங்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் சேவை மற்றும் பழுதுபார்ப்புக்கு இடைப்பட்ட அமெரிக்க கடற்படை கப்பல்களை அனுமதிக்கும், இது பல அரங்குகளிலும் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு குறைந்த மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நிலையான செயல்பாடுகளை எளிதாக்குகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

2022-யிலேயே வந்த  அமெ. கடற்படை கப்பல்

எல் அண்ட் டி நிறுவனத்துடன் அமெரிக்க  கடற்படை மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம், 2022ஆம் ஆண்டே அமெரிக்க கடற்படைக்குச் சொந்த மான சார்லஸ் ட்ரூ எனும் கப்பல் காட்டுப்பள்ளி யில் உள்ள கப்பல் தளத்திற்கு பழுது மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக வந்து சென்றது. காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், மரைன் இன்ஃப்ராஸ்ட்ர க்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட், எல் அண்ட் டி ஷிப் பில்டிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் வாயிலாக அதானியின் துறைமுக நிறுவனம் 2018ஆம் ஆண்டே விலைக்கு வாங்கியது. இத்துறைமுகத்தை ரூ. 53 ஆயிரம் கோடி செல வில் மொத்தமாக ஆண்டிற்கு 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் அளவிற்கு 6110  ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

சூழல் மாசு,  கடலரிப்பு பாதிப்பு

தற்போது அதானிக்குச் சொந்தமான இந்த காட்டுப்பள்ளி துறைகம் மற்றும் எல் அண்ட் டி-யின் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றால் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சூழல் மாசு மற்றும் கடலரிப்பால் அப்பகுதி மீனவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருவதால் அதானியின் துறைமுக விரிவாக்கத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில்தான் எல் அண்ட் டி  நிறுவனத்துடன் அமெரிக்க கப்பற்படை மேற்கூறிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த செயலை, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளிடை யான குவாட் (QUAD) என்னும் ராணுவக் கூட்ட மைப்பின் ஒருபகுதியாகவே பார்க்கவேண்டும். குறிப்பாக இலங்கையில் சீனா கப்பல்தளம் அமைத்துள்ள நிலையில், சென்னையில் அமெரிக்க கப்பல்தளம் என்பது தெற்கு ஆசியப் பகுதியில் பதற்றத்தை அதிகப்படுத்தக் கூடும். கூடுதலாக, மாறிவரும் சூழலில் புவிசார் அரசி யலில் தமிழ்நாடு ஒரு மையப்புள்ளியாக மாறு வதற்கான வாய்ப்பை உருவாக்கக் கூடும்.

காட்டுப் பள்ளி அமெரிக்க ராணுவத் தளமாகும்...

இந்தியப் பெருங்கடலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை அமெரிக்கா வுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கக் கூடும். ஏற்கெனவே ரஷ்யா, சீனா  உள்ளிட்ட நாடு களுடனான அமெரிக்க அரசின் நிலைபாடுகள் எதிராக உள்ள நிலையில் ஒருவேளை பிற்காலத்தில் போர்ச்சூழல் உரு வானால் அமெரிக்க ராணுவம் காட்டுப்பள்ளி அதானி துறை முகத்தை தனக்கான தளமாக பயன் படுத்தக்கூடும் என்கிற அச்சம் எழுகிறது. மேலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா,  வட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்கள் கொண்டுள்ள நாடுகளாகவும் உள்ளன. எனவே தெற்கு ஆசியப் பகுதியில் அமைதி நிலவ இந்த நாடுகளுக்கிடையான நல்லுறவு என்பது முக்கியமானது. அந்த வகையில் சார்க் கூட்ட மைப்பை வலுப்படுத்துவதும், அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்துவதுமே உலக அமைதிக்கு வழிவகுக்கும்.   வரலாற்று அடிப்படையில் இந்திய அரசு  கடந்த காலங்களில் அணிசேராக் கொள்கை யைப் பின்பற்றி வந்த நிலை மாறி வருகிறது. குறிப்பாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற பின் வெளியுறவுக் கொள்கையில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அமைதிக்கான செயல்பாடுகளை புறக்கணித்து விட்டு, முரண்களை அதிகரிக்கும் போக்குடனே செயல்படுகிறது.

தமிழ்நாட்டை ராணுவமயமாக்கும் அபாயம்

தமிழ் நாட்டு நிலப்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்துடன் அமெரிக்க ராணுவம் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வதும், அந்த ஒப்பந்த மானது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை களுக்கு உதவிகரமாக இருக்கும் என வெள்ளை மாளிகையே கூறுவதும் நிச்சய மாக புவி அரசியல் பார்வையில் நாம் அணுக வேண்டிய பிரச்சனை. எல் அண்ட் டி நிறு வனத்துடன் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் மற்றும் அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டம் மற்றும்; தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஒசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஒன்றிய அரசு அமைக்க திட்டமிட்டுள்ள ராணு வத் தளவாட உற்பத்திக் கேந்திரங்களும் தமிழ்நாட்டை ராணுவமயமாக்கும் ஆபத்தை விளைவிக்கும்.  மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டும்.


 

 

;