லக்னோ, ஜன.12- உத்தரப் பிரதேசத்தில், பாஜக எம்எல்ஏ-க்கள், அடுத்த டுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவரும் நிலை யில், சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ.பி. சிங், பாஜக அலுவலகத்திற்கு பூட்டு ஒன்றை பரிசாக அனுப்பி யுள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், உத்தரப் பிர தேசத்தில் பாஜகவின் முக்கிய அமைச்சராக கருதப்பட்ட சுவாமி பிரசாத் மவுரியா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ் வாதி கட்சியில் இணைந்துள் ளார். அவருடன் பில்ஹர் தொகுதி எம்எல்ஏ பாகவதி சாகர், தில் ஹர் தொகுதியைச் சேர்ந்த ரோஷன் லால் வெர்மா மற்றும் பந்தா தொகுதியைச் சேர்ந்த பிரிஜேஷ் பிரஜபதி, வினய் சாக்யா ஆகிய 4 பாஜக எம்எல்ஏக் களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே, ‘7, விதான் சபா, ஹஸ்ரத்கஞ்ச், லக்னோ’ என்ற முகவரியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத் துக்கு சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ.பி. சிங் பூட்டு ஒன்றைப் பரிசாக அனுப்பியுள்ளார். மார்ச் 10-ஆம் தேதிக்குப் பிறகு, பாஜக கட்சித் தலைமை அலுவலகத்துக்கு இந்த பூட் டைப் பயன்படுத்திக் கொள் ளுங்கள் என்று உ.பி. பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவினை, அவர் கிண்டலும் அடித்துள்ளார். “ஓம் பிரகாஷ் ராஜ்பர், ஜெயந்த் சவுத்ரி, ராஜ்மாதா கிருஷ்ணா படேல், சஞ்சய் சவு கான் மற்றும் சுவாமி பிரசாத் மவுர்யா ஆகியோர் ஏற்கெ னவே சமாஜ்வாதி கட்சியில் உள்ளனர். பாஜக தலைமை அலுவலகத்தில் இருக்கும் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு நான் பூட்டை பரிசாக அனுப்பியுள் ளேன். மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பூட்டை பயன் படுத்தி பூட்டிவிட்டு, வீட்டிற்கு செல்லவும். இது அலை அல்ல, இது ஒரு சமாஜ்வாதி கட்சி புயல்” என்றும் ஐ.பி. சிங் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட் டுள்ளார்.