லக்னோ, மார்ச் 12- உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டா லும், கடந்த தேர்தலில் பெற்றதைக் காட்டிலும் 50 தொகுதிகளை அக்கட்சி இழந்திருப்பதற்கும், வாக்கு சதவிகி தம் குறைந்ததற்கும் விவசாயிகளே காரணம் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2017 தேர்தலுக்கு முன்ன தாக, முசாபர் நகரில் நடந்த இந்து - முஸ்லிம் கலவரத்தின் வடுக்கள், 2020-இல் மூன்று வேளாண் சட்டங்க ளுக்கு எதிரான போராட்ட ஒற்றுமை யால் மறைந்தன. இந்துக்களும், முஸ் லிம்களும் அடிப்படையில் தாங்கள் விவசாயிகள் என்பதை உணர்த்தும் வகையில் ஒன்றாக கரம்கோர்த்தனர். பாஜக அரசின் அடக்குமுறைகளை யும் ஒன்றாகவே எதிர்கொண்டனர். அது உபி. தேர்தலிலும் எதிரொலிது தள்ளது. முன்பு கலவரம், பின்னர் விவசாயி கள் போராட்டம் நடந்த முசாபர் நகர், பாக்பத் மற்றும் ஷாம்லி ஆகிய மாவட் டங்களில் 12 தொகுதிகள் உள்ளன. அவற்றில் கடந்த முறை 10 தொகுதி களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போது 4 நான்கு தொகுதிகளே பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
அதி லும் ஒரு தொகுதியில் வெறும் 200 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தப்பிப் பிழைத்துள்ளது. “கலவர நாயகர்களான” ஒரு அமைச்சர் மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கி றார்கள். இந்துக்கள் அகதிகளாக வெளியேறுகிறார்கள் என்று புரளி கிளப்பி விட்ட ஹூக்கும் சிங்கின் வாரிசு மிரிக்னிகா சிங் தோல்வியடைந்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தீவிர மாக இருந்த பிஜ்னோரில் உள்ள 8 தொகுதிகளில் நான்கில் சமாஜ்வாதிக் கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள் ளது. தோற்றுப் போன இரண்டு தொகு திகளில் வித்தியாசம் என்று பார்த்தால் வெறும் 200 வாக்குகள்தான். உ.பி. மாநில அளவில், 2017-இல் பாஜக, சமாஜ்வாதி கட்சியை விட 18 சத விகித வாக்குகள் முன்னிலை பெற்றது. இதுவே 2019 மக்களவைத் தேர்த லின்போது 39 சதவிகிதமாக அதிகரித் தது. ஆனால், இப்போது பாஜக கூட்ட ணிக்கும் சமாஜ்வாதிக்கும் இடையி லான வித்தியாசம் என்று பார்த்தால், அது 8 சதவிகிதம்தான். 1992- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி 1993 சட்டப்பேர வைத் தேர்தலில் 17 சதவிகித வாக்கு களை பெற்றது. 1996 தேர்தலில் இது 21.8 சதவிகிதமாக உயர்ந்தது.
2002 தேர்தலில் 25.37 சதவிகிதமாகவும், 2007 தேர்தலில் 25.43 சதவிகிதமாக வும் உயர்ந்தது. 2012 தேர்தலில் அகி லேஷ் ஆட்சிக்கு வந்தபோது பெற்றது 29.15 சதவிகித வாக்குகள். ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 36.1 சதவிகிதம் என்ற பெரும் வாக்கு விகிதத்துடன் சக்திவாய்ந்த எதிர்க் கட்சியாக சமாஜ்வாதி வந்துள்ளது. இதற்கு உ.பி.யில் பாஜகவுக்கு எதி ராக வீசிய விவசாயிகளின் கோப அலையே காரணமாக அமைந்துள்ளது. உ.பி. தேர்தல் மூலம் இரண்டு செய்திகளை விவசாயிகள் தந்தி ருக்கிறார்கள். ஒன்று, வேளாண் சட் டங்களுக்கு எதிரான போராட்டம் இந்து - இஸ்லாமிய ஒற்றுமையை உரு வாக்கி இருக்கிறது. இரண்டாவது, அந்த போராட்ட மையங்கள் இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கின் றன என்பது. இது மக்களவைத் தேர்தலில் இன்னும் கூர்மையாக எதி ரொலிக்கலாம்.