கொல்கத்தா, ஜன.5- ஒன்றிய அரசின் கப்பல் போக்கு வரத்துத்துறை இணை அமைச்சராக இருப்பவர் சாந்தனு தாக்குர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர், திடீரென மேற்குவங்க மாநில பாஜக வாட்ஸ் ஆப் குரூப்களில் இருந்து வெளியேறி இருக்கிறார். விரைவிலேயே அவர், பாஜக-வில் இருந்தும் விலகுவார் என்று தக வல்கள் வெளியாகியுள்ளன. சாந்தனு தாக்குர் ‘மத்துவாஸ்’ (Matuas) என்ற சமூகத்தைச் சேர்ந்த வர். இந்நிலையில், தான் சார்ந்த சமூ கத்தினருக்கு பாஜக போதிய அங்கீ காரம் கொடுக்கவில்லை என தாக்குர் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில், மேற்கு வங்க மாநில பாஜக-வில் அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட் டன. இதிலும் ‘மதுவாஸ்’ சமூகத்தின ருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக் கப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக ‘மத்துவாஸ்’ பிரிவைச் சேர்ந்த சில எம்எல்ஏ-க்களுக்கு பாஜகவின் மாற்றியமைக்கப்பட்ட மாநில மற்றும் மாவட்டக்குழுக்களில் இடம் கிடைக்க வில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து ஏற்கெனவே சாந்தனு தாக்குர் தனது அதிருப்தியை வெளிப் படுத்தியிருந்தார். இந்நிலையில்தான், தற்போது அவர் வாட்ஸ் ஆப் குரூப் களில் இருந்து வெளியேறியிருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. முகுத்மோனி அதிகாரி, சுப்ரதா தாக்குர், அம்பிகா ராய், அசோக் கிர்தா னியா மற்றும் அசிம் சர்க்கார் ஆகிய 5 பாஜக எம்எல்ஏ-க்களும், தங்களுக்கு மாநில, மாவட்ட பாஜக கமிட்டிகளில் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி சில நாட்களுக்கு முன்னர் இணையமைச் சர் சாந்தனு தாக்கூரை அவரின் இல் லத்தில் சந்தித்து பேசியிருந்தனர். இவர்கள் ஏற்கெனவே பாஜக வாட்ஸ் ஆப் குரூப்களில் இருந்து வெளியேறி விட்டவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே, ஒன்றிய அமைச்சர் சாந் தனு தாக்குர் மற்றும் 5 எம்எல்ஏ-க்கள் விரைவில் பாஜகவிலிருந்து விலக லாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. இதனிடையே, “பாஜகவில் இருந்து விலகமாட்டேன்” எனவும் “கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன்” எனவும் சாந்தனு தாக்குர் விளக்கம் அளித்துள்ளார். மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தாரும், “ஒன் றிய இணையமைச்சர் சாந்தனு தாக் குர், பாஜகவின் ஒரு அங்கம். அவரது மனக்குறைகள் பேசித் தீர்க்கப்படும்” என்று சமாளித்துள்ளார்.