இந்தூர், மே 30 - மத்தியப் பிரதேசத்தில் உள்ள மஹா காலேஷ்வர் கோயில் வளாகத்தில் நிறு வப்பட்ட ஏழு ரிஷிகளின் சிலைகள் பலத்த காற்றினால் கீழே விழுந்து சேத மடைந்துள்ள நிலையில், கட்டு மானத்தில் ஆளும் பாஜக அரசு அரங் கேற்றிய ஊழலே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மஹாகாலேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலைச் சுற்றி, ருத்ரசாகர் ஏரியைக் கடந்து செல்லும் மஹாகல் லோக் வழித்தடம் அமைக்கப்பட்டது. 900 மீட்டர் நீளமான இந்த பாதையில் ஆனந்த தாண்ட வமாடும் சிவனின் சிலை, சிவன்- சக்தி தேவி இணைந்து இருக்கும் சிலை என 160-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப் பட்டன. இதன் ஒரு பகுதியாக அங்கே ஏழு சப்தரிஷிகளின் சிலைகளும் நிறு வப்பட்டன. இதனைப் பிரதமர் மோடி கடந்தாண்டு திறந்து வைத்தார். இந்நிலையில்தான், ஞாயிறன்று வீசிய பலத்த காற்றுக்கு, அங்கே வைக்கப் பட்டுள்ள 7 ரிஷி சிலைகளில் 6 சிலைகள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயி லுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சம்பவம் நடந்துள் ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்பட வில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வளாகமே சில மணி மூடப்பட்டுள்ளது.
இந்த மஹாகல் லோக் திட்டம் மொத்தம் ரூ. 856 கோடி செலவில் திட்ட மிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ரூ. 351 கோடி மதிப்பிலான பணிகள் முடி வடைந்த நிலையில், கடந்த 2022 அக்டோபரில்தான் இதனைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், காற்றைக் கூட தாங்க முடியாத அளவிற்கு சிலைகள் நிறுவப் பட்டிருந்தது, அதன் கட்டுமானத்தில் நடந்துள்ள ஊழலையே காட்டுவ தாக, சிவராஜ் சிங் சவுகான் தலைமையி லான பாஜக அரசை, காங்கிரஸ் விமர்சித் துள்ளது. தரமற்ற பொருட்களே இந்த விபத்திற்குக் காரணம் என்றும் இதில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. “உடனடியாக சிலைகளைச் சீரமை க்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். தரமற்ற கட்டுமா னம் குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண் டும்’’ என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல் நாத் வலியுறுத்தியுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த நிறுவனங் களே சிலைகளை அமைக்கும் பணி யிலும், நடைபாதை அமைக்கும் பணி களையும் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. “மஹாகல் லோக் வழித்தடத்தில் மொத்தம் 160 சிலைகள் நிறுவப் பட்டுள்ளன, அவற்றில் 10 அடி உயர முள்ள 6 ரிஷிகளின் சிலைகள் மாலை 4 மணியளவில் பலத்த காற்று வீசிய தால் கீழே விழுந்தன. இதையடுத்து அந்த பாதை உடனடியாக மூடப் பட்டது. இருப்பினும், விரைந்து நடவடி க்கை எடுக்கப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் அது திறக்கப்பட்டது. அப் போது ஏராளமான பார்வையாளர்கள் அங்கு குவிந்தனர். கீழே விழுந்து சேதமடைந்த சிலைகள் மஹாகா லேஷ்வர் கோவிலுக்குள் இல்லை. அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மஹாகல் லோக் வழித்தடத்தில்தான் இருந்தன. அவை விரைவில் அதே இடத்தில் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.