states

img

பாஜகவுக்கு ஒருநாள் நிச்சயமாக ‘அதிர்ச்சி’ காத்திருக்கிறது!

சசிதரூர் பேச்சு

புதுதில்லி, மார்ச் 15- “பாஜக விரும்பியதை மக்கள் இன்று வழங்கியுள்ளனர். ஆனால், ஒரு நாள் பாஜக-வை வாக்காளர்கள் ஆச்சரியப்படுத்துவார்கள்” என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறி யுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூ ரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், காங்கிரஸ் எம்.பி.  சசி தரூர் மேலும் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி அபா ரமான வீரியமும் சுறுசுறுப்பும் கொண் டவர். குறிப்பாக அரசியல் ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய சில விஷ யங்களை செய்துள்ளார். ஆனால், நம் நாட்டை வகுப்புவாத மற்றும் மத அடிப்படையில் பிளவுப்படுத் தும் சில சக்திகளை அவர் (மோடி) கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவர் ஒரு நச்சுத்தன்மையை அறிமுகப் படுத்துகிறார். அது துரதிர்ஷ்டவச மானது. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவு கள் முன்கூட்டிய முடிவு என்று அர சியல் ஆய்வாளர்கள் விவரித்ததில் நான் ஆச்சரியம் அடைந்தேன். தேர் தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரும் வரை பாஜகவின் வெற்றியை வெகு சிலரே கணித்தனர். இவ்வளவு பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. இன்று பாஜக விரும்பியதை மக்கள் வழங் கியுள்ளனர். ஆனால், ஒரு நாள் இந்திய வாக்காளர்கள் பாஜக-வை ஆச்சரியப்படுத்துவார்கள். இவ்வாறு சசிதரூர் பேசி யுள்ளார்.