states

முஸ்லிம்களின் வாக்குரிமையை; பறிக்க வேண்டும்

பாட்னா,பிப்.27-   பாஜகவின் மக்கள் பிரதிநிதிகள் சிறு பான்மை மக்களுக்கு எதிராக வெறிப் பேச்சுக்களை பேசுவது தொடர்ந்து வருகிறது. இவர்களின் பேச்சுக்களை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் பாஜக தலை வர்களும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை இருக்கக்கூடாது என்றும், அந்த சமூகம் இந்தியாவில் “இரண்டாம் தர குடி மக்களாக” வாழ வேண்டும் என்றும் பாஜக  எம்.எல்.ஏ ஒருவர் வெறியுடன் பேசியுள்ளார்.  பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பிஸ்பி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஹரிபூஷன் தாக்கூர்.  பிப்ரவரி  25 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய இவர், 1947 இல் பிரிவினையின் போது முஸ்லிம்களுக்கு தனி நாடு வழங்கப்பட்டதால், அவர்கள் பாகிஸ்தா னுக்கு செல்ல வேண்டும். அவர்கள் இந்தியா வில் வாழ்ந்தால், அவர்கள் இரண்டாம் தர  குடிமக்களாக வாழ வேண்டும். முஸ்லிம்கள் இந்தியாவை “இஸ்லாமிய நாடாக” மாற்ற விரும்புவதாகவும், முஸ்லிம் களின் வாக்குரிமையை பறிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று வெறித்தனமாக பேசினார்.   சமீபத்தில், சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், பீகாரின் கிழக்கு  சாம்ப்ரான் மாவட்டத்தில் உள்ள கோவிந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் மணி திவாரி தனது தொகுதி மக்களிடம் , “யாராவது இந்தியாவில் வாழ  வேண்டும் என்றால், அவர் ராதே-ராதே என்று சொல்ல வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் வந்தே மாதரம். இது மோடி [பிரதமர்] மற்றும் யோகி [உ.பி. முதல்வர்] அரசு” என்று கூறினார்.