states

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

புதுதில்லி,ஜன.11- நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருவ தால்  அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர்  மோடி 13ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தி யாவில் தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து பெரும்பா லான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொற்று பரவலின் வேகம் குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல், மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகள் நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. எனவே தொற்று பரவல் வேகம்  பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அனைத்து  மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி 13-ஆம் தேதி  காணொலி முறையில் ஆலோசனை நடத்த உள்ளார்.