புதுதில்லி,ஜன.30- பெகாசஸ் வேவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலை வர்கள், நீதிபதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட பல்வேறு முக்கிய நபர்களை இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக சர்வதேச மற்றும் இந்திய நாளிதழ்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெகாசஸ் வேவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக அமெரிக்காவின் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளேடு சில தகவல்களை வெளி யிட்டு, அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு பத்திரிகை யாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் குறித்து விசா ரணை நடத்திய உச்சநீதிமன்றம் பெகாசஸ் விவகா ரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசார ணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தர விட்டது. இந்நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வில்லை, எனவே ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வ தற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.