புதுதில்லி, டிச.13- ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் வாங்கி, மோடி அரசு நாட்டையே சீரழித்து விட்டதாக, நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் கடுமை யாக குற்றம் சாட்டின. மோடி ஆட்சியில், வேலைவாய்ப் பின்மை, விலைவாசி அதிக ரித்து விட்டதாகவும் சாடியுள் ளன. மக்களவையில் திங்க ளன்று மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற் றது. அப்போதுதான் எதிர்க் கட்சிகள் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்தன. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசுகை யில், “ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் அரசு இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதை ரிசர்வ் வங்கி யிடம் இந்த அரசு விட்டு விட் டதா? பணவீக்கம் பற்றி அரசு என்ன பதில் சொல்லப் போகி றது?
உணவு மற்றும் எரி பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நட வடிக்கைகள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ் பேசுகையில், “இலக்கு களை அரசால் அடையமுடிய வில்லை. வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளன. நகர்ப் புறங்களிலும் கூட இப்போது வேலைகள் இல்லை. இந்த அரசைப் பார்த்து நாங்கள் பொறாமைப்படுவதில்லை. நாங்கள் மிகவும் கவலைப் படுகிறோம். இந்த பிரச்சனை களுக்கு தீர்வு காண அரசு தவறி விட்டது” என்று குற்றம் சாட்டினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. பைசல் பேசுகை யில், “பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா தொற்று ஆகியவை சிறு மற்றும் நடுத் தர நிறுவனங்களை பாதித் துள்ளது” என்றார். பிஜூ ஜன தாதளம் கட்சியின் சர்மிஸ்தா சேதி பேசுகையில், “அதிக வேலையின்மை, குறைந்த தனியார் துறை முதலீடு, அதிக உணவுப் பணவீக்கம் ஆகியவை மக்களைப் பாதிக் கின்றன” என்று குறிப்பிட்டார். தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி, “1947 முதல் 2014 வரை ரூ. 55 லட்சத்து 87 ஆயிரம் கோடி அளவிற்கு இந்தியா கடன் வாங்கியுள் ளது. ஆனால், மோடி அரசு வந்தபிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 10 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இந்த அரசு நாட்டை முழுவது மாக சீரழித்து விட்டது” என்று கடுமையாக சாடினார்.