விசாரணைக்குழுவில் இடம்பெற்ற மூத்த ரயில்வே அதிகாரி மாறுபட்ட அறிக்கை
புவனேஸ்வர், ஜூன் 8 - 288 பேர்களின் உயிர்களைப் பறித்த ஒடிசா ரயில் விபத்துச் சம்ப வம் தொடர்பாக, ரயில்வே அமைத்த விசாரணைக்குழுவில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸானது, சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த லூப் லைனுக்குள் நுழைவ தற்கு சிக்னல் கொடுக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என விசார ணைக்குழுவில் இடம்பெற்றுள்ள 5 அதிகாரிகளில் 4 பேர் கூறி யிருந்தனர். ஆனால், இந்திய ரயில்வேயின் மூத்த செக்ஷன் பொறியாளரும், குழு வில் இடம்பெற்றுள்ள மற்றொரு அதிகாரியுமான ஏ.கே. மஹந்தா மட்டும் மாறுபட்ட கருத்தைத் தெரி வித்துள்ளார். மெயின் லைனில் நுழைவதற்கு மட்டுமே கோர மண்டல் எக்ஸ்பிரஸூக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், லூப் லைனில் செல்வதற்கு சிக்னல் தரப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், லூப் லைனில் நுழைவதற்கு முன்பா கவே ரயில் தடம் புரண்டு விட்டதாக வும்; மெயின் லைனில் செல்வ தற்குப் பதிலாக, லூப் லைனில் ரயில் சென்றதற்கும் கூட அதுவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
ஜூன் 2 அன்று, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் 288 பேர் பலியான நிலையில், இந்த விபத்திற் கான காரணம் குறித்து ஆராய, இந்திய ரயில்வேயானது, 5 பேர் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்தது. இந்தக்குழு உடனடியாக ஆய்வு நடத்தி, ஜூன் 3 அன்றே முதற்கட்ட மாக 2 பக்க விசாரணை அறிக்கை யைத் தாக்கல் செய்தது. அதில், “தவறான சிக்னல் வழங்கப்பட்டதும், பாயிண்ட் ‘17A’ மாறாததுமே இந்த விபத்திற்கு காரணம்” என்றும் சொல்லப்பட்டது. “12841 கோரமண்டல் விரைவு ரயில், தவறான சிக்னல் கொடுக்கப்பட்டு, லூப் லைனுக்குள் அந்த ரயில் நுழைந்து அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்கு உள்ளா னது” என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், குழுவில் இடம்பெற்றி ருந்த ஏ.கே. மஹந்தா மட்டும், இந்தக் கருத்தைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்திய ரயில்வே யின் மூத்த செக்ஷன் பொறியாளரான ஏ.கே. மஹந்தா, மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட ஐந்து பேர் அடங்கிய குழுவில் ஒருவர் ஆவார். ஆரம்பத்தில் மற்ற நான்கு உறுப்பினர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, அவர் அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தாலும், அப்போதே தனது மாறுபட்ட கருத்துக் களையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, “பாயிண்ட் ‘17A’ லூப் லை னுக்காக அமைக்கப்பட்டது என்ற கருத்தை, தான் ஏற்றுக்கொள்ள வில்லை” என்று தெரிவித்துள்ளார்.
“டேட்டா லாக்கர் அறிக்கைகளை ஆராய்ந்ததன் அடிப்படையில், அந்த பாயிண்ட் மெயின் லை னுக்காக அமைக்கப்பட்டது. அது ரயில் தடம்புரண்ட பின்னரும் அங்கே இருந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார். “ரயில் தடம்புரண்ட நிகழ்வு, லெவல் கிராஸிங் கேட் எண் 94-க்கு முன்பே நடந்துள்ளது. அது, பாயிண்ட் ‘17A’க்கு முன்பாகவே அமைந்துள்ளது. அதனால் ரயில் லூப் லைனில் நுழைவதற்கு முன்பா கவே ரயில் விபத்துக்கு உள்ளாகி யிருக்கிறது” என்று அவர் வாதிட்டுள் ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கும் ஏ.கே. மஹந்தா பேட்டி அளித்துள்ளார்.
அதில், “மெயின் லைன் மற்றும் பாயிண்ட்காக சிக்னல் கொடுக்கப் பட்டிருக்கும் போது, ரயில் லூப் லைனுக்குள் நுழைந்தது என்ற கருத்தை ஏற்க முடியாது, இருந்த போதிலும் மெயின் லைனுக்கான சிக்னலை சரிசெய்த பின்னர், பாயிண்ட் லூப் லைனுக்கு மாறிய நிகழ்வுகள் நடந்துள்ளன. சிக்னல், ரயிலின் பயணம் மற்றும் தடம் புரண்டது தொடர்பாக தெளிவான விளக்கத்தை டேட்டா லாக்கர் பதிவு கள் கொடுக்கும்” என்று குறிப்பிட்டுள் ளார். ஏ.கே. மஹந்தாவின் இந்த கூற்று மூலம், “கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனுக்குள் நுழைந்து, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியதா அல்லது முன்ன தாகவே தடம் புரண்டு, லூப் லை னுக்குள் நுழைந்து விபத்துக்கு உள்ளானதா?” என்பதுதான் கண்ட றியப்பட வேண்டிய உண்மையாகும். விபத்துக்கு முன்பாக, பகானகா வழித்தடத்தில் ரயில்களை இயக்கி யவர்கள், ஊழியர்கள் உள்பட மொத்தம் 55 பேருக்கு, விபத்து தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கோரமண்டல் லோகோ பைலட் ஜி.என். மோஹான்டி, துணை லோகோ பைலட் ஹெஜாரி பெஹேரா, பெங்களூரு - ஹவுரா லோகோ பைலட் சித்தரஞ்சன், துணை லோகோ பைலட் சுதீர்குமார், சரக்கு ரயிலின் லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட் மற்றும் பகானகா பஜார் சிக்னல் பராமரிப்பு பொறியாளர் அவினாஸ் மோகன்ஜி, ஒப்பந்த வயரிங் பணி யாளர் ரவீந்திரநாத் தாஸ்மால், உத வியாளர் பிரசாந்த் ராஜூ ஆகி யோருக்கு, தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி இந்த நோட்டீஸ்களை அனுப்பியுள்ளார்.
‘பாதுகாப்பு ஆணையர் விசாரணை மட்டுமே முறையானது’
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, இந்திய ரயில்வேயின் மூத்த செக்ஷன் பொறியாளர் ஏ.கே. மஹந்தா மாறுபட்ட கருத்தை வெளி யிட்டுள்ள நிலையில், “ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்தும் விசாரணை மட்டும்தான் முறையான விசாரணை” என்று ரயில்வேயின் ஓய்வுபெற்ற நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்துளார். “மாறுபட்ட கருத்து கூறியவர் ஒரு சிக்னல் பொறியாளர். அவர் அப்படித்தான் கூறுவார். ஏனெனில், ஒடிசா விபத்தில் சிக்னல் பிரிவு மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. இன்டர்லாக்கிங் சிஸ்டமை பொறுத்தவரை ஒரு ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டால் அதை மாற்ற அனுமதிக்காது. அந்த வாதத்தின் அடிப்படையில், கோரமண்டல் ரயிலுக்கு சிக்னல் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகையால், தனது துறை மீது குற்றமில்லை என்று ஏ.கே. மஹந்தா மறுக்கிறார்” என்று மனோகரன் குறிப்பிட்டுள்ளார்.