states

img

ரயில்வேயில் ரத்தான சலுகைகள் இனி இல்லை கோவிட் காலத்தில் ஒன்றிய அரசின் கைவிரிப்பு

புதுதில்லி, பிப். 8- கோவிட் பெருந்தொற்று நோயை அடுத்து ரயில்வேயால் நிறுத்தப்பட்ட பயணச் சலுகைகளை மீண்டும் வழங்க விரும்ப வில்லை என்று ஒன்றிய அரசு கைவிரித்துள் ளது. மூத்த குடிமக்கள், காவல்துறையில் பதக்கம் வென்றவர்கள், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் விதவைகள், பத்திரிகை யாளர்கள் உள்ளிட்ட 53 பிரிவுகளுக்கு பயணச் சலுகைகளை பெற்று வந்தனர். இவை அனைத்தும் கோவிட் பெருந்தொற்றை காரணமாக கூறி ஒன்றிய அரசு நிறுத்தி  வைத்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், 37 பிரிவினருக்கான சலுகை களை அரசு கைவிட்டுள்ளதாகவும் அவற்றை மீண்டும் வழங்க முடியாது எனவும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி, மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை, சுமார் 4 கோடி மூத்த குடிமக்கள் மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2021 வரை பயணத்திற்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டி யிருந்தது தெரியவந்துள்ளது. மூத்த குடி மக்களாக உள்ள ஆண்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் 40 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகிதமும் சலுகை அளிக்கப்பட்டது. சலுகைகளை மீண்டும் வழங்காதது நிதி நெருக்கடி என்பது ஒன்றிய அரசின் விளக்கம். ரயில்வேயை நம்பி பயணிக்கும் ஏழை, எளிய மக்களை துன்புறுத்தும் அரசின் முடி வுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு  வலுத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு பெரும் வரிச்சலுகையை அனு மதிக்கும் மோடி அரசின் நடவடிக்கை மிகவும் நியாயமற்றது என்ற விமர்சனம் வலுவாக எழுந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகளை விரைவில் வழங்குமாறு மக்களவை உறுப்பினர் வி.சிவதாசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.