ஜெய்ப்பூர், பிப்.20 - இராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள சௌத்கா பர்வாடா கிராமத்தில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனுக்கு திருமண நிகழ்விற்காக ஒரு வாகனத்தில் பத்து பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வாகனம் இராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்து ஞாயிற்றுக் கிழமை காலை 7.50 மணியளவில் நடந்துள்ளது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர், மணமகன் உட்பட ஒன்பது பேரின் உடல்களை மீட்டனர்.