states

மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மாநிலங்களுக்கு மோடி அரசு அனுமதி?

புதுதில்லி, ஏப்.25- அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வ தற்கு ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.  இதுதொடர்பாக விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியா கும் என்ற நிலையில், மேலும் இது ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. கோடைக்காலம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் 15 சதவிகி தம் வரை மின்தேவை அதிகரித்துள் ளது. இந்தியாவின் மின்சாரத் தேவையானது, பெருமளவு அனல் மின் நிலையங்களின் மூலமாகவே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்னுற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 178 அனல் மின் நிலையங்க ளில் சுமார் 500 மெட்ரிக் டன் அள வுக்கும் குறைவான அளவிலேயே நிலக்கரி இருப்பில் உள்ளதால், உற்  பத்தியை முழு அளவில் மேற்  கொள்ள முடியாமல், நாடு முழு வதும் கடும் மின்பற்றாக்குறையும், அதன்மூலம் மின்வெட்டுப் பிரச்ச னையும் அதிகரித்துள்ளது. உரிய காலத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்காதது, இறக்குமதி செய்யாதது மற்றும் அவற்றை மின்னுற்பத்தி நிலையங்களுக்கு விநியோகம் செய்யாதது என மோடி  அரசு காட்டிய அலட்சியமே இன் றைய மின்வெட்டுப் பிரச்சனைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

நிலைமையைச் சமாளிக்க, தனி யார் நிறுவனத்திடம் இருந்து நிலக்  கரி மற்றும் மின்சாரம் வாங்க  வேண்டிய நிலைக்கு மாநில அரசு கள் தள்ளப் பட்டுள்ளன. இது கூடு தல் செலவை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, இதனை சமாளிக்கும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் மின்சார கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஒன்றிய பாஜக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்  ளதாக தகவல்கள் வெளியாகி இருக் கின்றன. அதானி குழுமம், டாடா பவர் மற்  றும் எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் கூடுதல் விலைகொடுத்து இறக்கு மதி செய்யப்பட்ட நிலக்கரியை வைத்துத்தான் மின்சாரம் தயாரித்து அதனை மாநிலங்களுக்கு விற்று வருகின்றன.  இந்த நிலையில் அதிக விலை யுள்ள இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சா ரம் தயாரிக்கும் செலவை நுகர்வோரி டம் வசூலித்து கொள்வது என்று இந்த மாத தொடக்கத்தில், ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்  டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.

எஸ்ஸாரின் 1,200-மெகாவாட் சாலயா ஆலை மற்றும் அதானியின் 1,980-மெகாவாட் ஆலை முந்த்ரா  ஆலை போன்றவற்றில் இருந்து பெறப்படும் மின்சாரத்துக்கு கூடு தல் விலையும் நிர்ணயம் செய்யப்பட்  டது. டிசம்பர் 2022 வரை கூடுதல் செல வில் இறக்குமதி செய்யப்படும் நிலக்  கரியை பயன்படுத்தி தயாரிக்கப் படும் மின்சாரத்திற்கான கட்ட ணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூ லிப்பதற்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ஒன்றிய மின்துறை செயலர் அலோக் குமாரும் தெரிவித்துள்ளார். எனவே, கட்டணங்களை உயர்த்திக் கொள்வது தொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரை வில் வெளியாகும் என்று எதிர்பார்க்  கப்படுகிறது.  ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சமை யல் எண்ணெய் உள்ளிட்ட விலை உயர்வால் மக்கள் செய்வதறியாது விழிப்பிதுங்கி நிற்கும் நிலையில், தற்போது மின் கட்டணமும் உய ரப்போகிறது என்ற தகவல் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.