சஞ்சய் ராவத் விளாசல்
மும்பை, ஏப்.18- “மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே ஒரு புதிய இந்து ஓவைசி; மாநிலத்தில் வகுப்புவாத மோதலை உருவாக்க அவரது கட்சிக்கு பாஜக காண்ட்ராக்ட் வழங்கியுள்ளது” என சஞ்சய் ராவத் சாடியுள்ளார். “மகாராஷ்டிராவில் மே 3-ஆம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் அனுமான் பாடல் களை ஒலிபெருக்கிகளில் இசைப் போம்” என்று மகாராஷ்டிரா நவ்நிர் மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளார். “இந்த விஷயத்தில் நாங்கள் பின் வாங்க மாட்டோம்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத், ராஜ்தாக்கரேவை கடுமை யாக சாடியுள்ளார். “’மகா விகாஸ் அகாதி’ கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ-க்களை தங் கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததால் பாஜக விரக்தியடைந்துள்ளது. இதனால், வகுப்புவாத மோதலை உருவாக்க மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சிக்கு பாஜக காண்ட்ராக்ட் வழங்கியுள்ளது. மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை யும், அனுமன் பாடல்களை ஒலிப்ப தும், ‘மகா விகாஸ் அகாதி’ அரசாங் கத்தை கவிழ்க்க மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா உடன் இணைந்து பாஜக மேற்கொள்ளும் முயற்சி யின் ஒரு பகுதியாகும். அவர்கள் (எம்.என்.எஸ்.) மசூதி களுக்கு முன்னால் அனுமன் பாடல் களை பாடினால்தான், உண்மை யான ஓவைசி (மஜ்லிஸ் கட்சித் தலைவர்) வருவார். எல்லாமே கல வரமாகி விடும். பின்னர் ராஜ்பவன் மூலம் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். ஏனெனில், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கலவரங்களை உரு வாக்கி, இந்த வழியில் வெற்றி பெறு வதுதான் பாஜக-வின் உத்தியா கவே இருக்கிறது. ஆனால், வகுப்பு வாத மோதலை உருவாக்கும் முயற்சியை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர். இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப் பிட்டுள்ளார்.