ஓசூர் அருகில் சானமாவு பகுதியில் தலித் மக்களுக்கு அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டுவதற்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது.
சூளகிரி வட்டம் சானமாவு கிராமத்தின் 41 தலித் குடும் பங்களுக்கு 1997-98 ஆம் ஆண்டில் சர்வே எண் 12/2 இல் 2.7 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கைய கப்படுத்தப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை அபகரிக்க சில அரசு அதிகாரிகள் துணையுடன் தனிநபர்கள் சிலர் பல முயற்சி களும் பத்திரப்பதிவும் செய்து தொடர்ந்து அடாவடி செய்து வந்த னர். நிலத்தை ஆக்கிரமிக்க முயற் சித்தவர்கள் குறித்தும், வழக்கு குறித்தும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சானமாவு தலித் மக்க ளுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆதி திராவிட நலத்துறை தலித் மக்களுக்கு ஒப்படைவு செய்ய வலி யுறுத்தி தொடர் போராட்டங்களு டன் வழக்கும் நடத்தின. இந்நிலை யில் 3 மாதங்களுக்கு முன்பு வழக்கு வெற்றி பெற்றது. சானமாவு ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட 41 பட்டாக்களுக்கும் நிலத்தை எடுத்து அளவீடு செய்து ஒப்படைக்க வேண் டும் என்று நீதிமன்றம் உத்தர விட்டது. அதிகாரிகள் அலட்சியம் ஆனால், 2 மாதங்கள் கடந் தும் அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாதி ருந்த நிலையில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் நஞ்சுண்டன் ஆகியோர் தலைமையில் செப்டம்பர் 13 இல் சானமாவு தலித் மக்கள் பட்டா நிலங் களை அளவீடு செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஓசூர் சாராட்சியர் சரண்யா நீதிமன்ற உத்தரவு, பட்டாக்களை சரி பார்த்ததுடன் நிலத்தை இரண்டு நாட்கள் கழித்து உடனடியாக அளவீடு செய்து பிரித்து தர உடன் நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தர விட்டார்.
‘வீடு கட்டும் விழா’
ஆனாலும் அரசு அதிகாரிகள் இழுத்தடித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபடி, 1998 இல் வழங்கப்பட்ட நிலத்தில் பட்டா வுக்கு உரிய சானமாவு தலித் மக்கள் வீடு கட்டும் விழா பேரணி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், அக்டோபர் 16 திங்களன்று மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. தலித் மக்களுக்கு வழங்கப் பட்ட உரிய பட்டா நிலத்தில் வீடு கட்ட நுழைய முற்பட்டபோது வட்டாட்சியர் சக்திவேல், ஆதி திராவிட நலத்துறை அலுவலர் குண சிவா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல்துறை யினர் நிலத்தில் புக விடாமல் தடுத்தனர். இதனைக் கண்டித்து நிலத்தின் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன் னணி, மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் மற்றும் நிலத்தின் உரிமை யாளர்களான சானமாவு தலித் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது, தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் நவம்பர் 10 அன்று வீடு கட்டிக்கொள்ள ஒப்புக்கொண் டதுடன், அதற்குள் அரசு சார்பில் நிலத்தை அளவீடு செய்து, ஆவ ணங்களை சரி செய்துகொடுப்ப தாகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் அதி காரிகள் உறுதிமொழி அளித்தனர். இதைத் தொடர்ந்து நடை பெற்ற வெற்றி விழா கூட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் தலை வர் நாகேஷ் பாபு வரவேற்றார். ஊராட்சி தலைவர் லட்சுமண், சுரேஷ் ஜெயம்மா, முத்தப்பா, ராணியம்மா, அசோக் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், மாநி லத் துணைத் தலைவர் ஜி.ஆனந் தன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் சேகர்,சி.பி. ஜெய ராமன், இருதயராஜ், கோவிந்த சாமி,ஜேம்ஸ் ஆஞ்சலாமேரி, சுரேஷ், பிரகாஷ்,மகாலிங்கம், இடைக்குழு செயலாளர்கள் ராஜா ரெட்டி, முனியப்பா, வெங்கடேஷ், ராஜா, தேவராஜ், சபாபதி, டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். மாவட்டத் துணைத் தலைவர் நாராயண மூர்த்தி நன்றி கூறினார்.