கொழும்பு,பிப்.2- அந்நியச் செலாவணி பற்றாக்குறை யால் கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கிறது.எரிபொ ருள் விநியோகம் இல்லாமல் அனல் மின் நிலையங்களின் இயக்கம் பாதிக்கப் பட்டுள்ளதால், மின் வெட்டு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் எரிபொருள் தேவையை ஈடுசெய்ய பெட்ரோல், டீசலை வழங்குமாறு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அந்நாட்டின் மின்சக்தித் துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்திருந்தார். இந்நிலையில், தலா 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாக இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.