ஆளுநரை கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டம்
சென்னை, செப்.7- பல்கலைக்கழக துணைவேந் தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவை தன்னிச்சையாக அறி வித்துள்ள ஆளுநர் ஆர்.என் ரவி யின் அறிவிப்பை திரும்பப்பெறக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று ( செப்டம்பர் 8) பல்க லைக்கழகங்கள் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாணவர் சங்கத் தின் மாநிலத் தலைவர் கோ. அரவிந்தசாமி, மாநிலச் செயலா ளர் க.நிருபன் சக்கரவர்த்தி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் பாரதியார் பல்க லைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், கல்வியியல் கல்லூரி பல்க லைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு வை ஆளுநரே தன்னிச்சையாக எதேச்சதிகாரத்தோடு அறிவித்தி ருக்கிறார். அதோடு மட்டுமல்லா மல் வழக்கத்திற்கு மாறாக மூன்று பேர் கொண்ட குழுவிற்கு பதிலாக நான்கு பேர் கொண்ட குழுவாகவும் நான்காவது நபரை யுஜிசியிலி ருந்து என்று பீகாரை சார்ந்த வலது சாரி சிந்தனை கொண்ட ஒருவரை யும் நியமித்திருக்கிறார்.
இது பல்க லைக்கழகங்களில் வலதுசாரி சிந்த னையை திணிப்பதற்கான தேடுதல் குழுவாக அமையுமே தவிர பல்க லைக்கழகத்தின் தனித்துவத்தை பாதுகாப்பதற்கும் பல்கலைக்கழ கத்தின் வளர்ச்சியை முன்னெடுப்ப தற்குமான துணைவேந்தரை தேடு வதற்கான குழுவாக செயல்படாது. இந்திய அரசியலமைப்பு மாண்பு களை பாதுகாக்க வேண்டியவரும் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு வழி காட்ட வேண்டிய இடத்தில் இருக் கக்கூடிய ஆளுநர் தனது பொறுப் புக்கு உகந்தவாறு செயல்படா மல் அரசியலமைப்பு சட்டத்தை மீறு பவராகவும் அதன் கடமைகளுக்கு புறம்பாகவும் செயல்பட்டு வரு கிறார். ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். ஆளுநர் ரவி யின் இந்த செயல்பாடுகளை கண் டித்தும், தேடுதல் குழுவை தன்னிச் சையாக அறிவித்துள்ள அறி விப்பை ஆளுநர் திரும்பப் பெறக் கோரி இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்க லைக்கழகங்கள் முன்பு இன்று போராட் டம் நடத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.