லக்னோ, ஏப். 4- பெட்ரோல் விலையை தினமும் 80 காசுகள் உயா்த்தினால், வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 275-ஆக இருக்கும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் கூறியுள்ளார். இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை, கடந்த 14 நாட்களில் மட்டும் 12 முறை உயர்த்தப் பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 110 ரூபாய்க்கும், டீசல் 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வரு கிறது. இதுவே மும்பை போன்ற இடங்களில் பெட்ரோல் 120 ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் டுவிட்ட ரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், “பெட்ரோல் விலை யை தினமும் 80 காசுகள் உயா்த்தினால் ஒரு மாதத்தில் ரூ. 24 அதிகரிக்கும். இதே நிலை நீடித்தால் அடுத்த 7 மாதங் களில், அதாவது அடுத்த சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடை பெறும் நவம்பா், டிசம்பா் மாதங் களில் பெட்ரோல் விலை ரூ. 175 அதிகரித்திருக்கும்.அதாவது, தற்போது ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ. 100-ஆக உள்ளது என்றால், 7 மாதங்களுக்குப் பிறகு அதன் விலை ரூ. 275-ஆக அதி கரித்திருக்கும். பாஜக ஆட்சியில் விலைவாசி உயா்வு பற்றிய கணக்கு இதுதான்!” என்று அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார். நவம்பா், டிசம்பர் மாதங்களில் குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.