18 மாதங்களாக சம்பளம் தரா மல் ஒன்றிய மோடி அரசு இழுத்து வரும் நிலையில், “சந்திரயான் 3” திட்டத்திற்கு ஏவு தளம் வடிவமைத்த பொறியாளர் இட்லி விற்கும் பரிதாபமான சம்ப வம் அரங்கேறியுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ கடந்த ஜூலை 14 அன்று “சந்திரயான் 3” விண்கலத்தை விண்ணில் ஏவி யது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துரு வத்தில் வெற்றிகரமாக தரை யிறங்கி சாதனை படைத்தது. பிர தமர் மோடி முதல் ஆளாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ காட்சித் தளத்தில் தோன்றி, சாதனை நிகழ்வு என சொற்பொழிவுகளை அடுக்கினார். “சந்திரயான் 3” விண்கலம் நிலவின் தென் துருவத்திற்கு உலக சாதனை என்றாலும், வேத னையான சம்பவமும் வெளிச் சத்திற்கு வந்துள்ளது. “சந்திர யான் -3” ஏவுகணை மேடை மற் றும் கதவுகளை உருவாக்கிய ஹெச்இசி நிறுவனத்தின் முக் கிய பொறியாளரும், தொழில் நுட்ப வல்லுநருமான தீபக் குமார் உப்ராரியா ஜார்க்கண்ட் மாநி லம் ராஞ்சியில் உள்ள சாலை யோரக் கடையில் இட்லிகளை விற்பது கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது. ஒன்றிய அரசு 18 மாத காலம் சம்பளம் தராததாலும், தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே இவருக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் இட்லி விற்கும் நிலைக்குவந்துள்ளதாக தீபக் குமார் உப்ராரியா கூறி யுள்ளார். பொதுத்துறை நிறுவனமான ஹெச்இசி நிறுவனத்தில் பணி யாற்றும் 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக ஒன்றிய மோடி அரசு சம்பளம் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக் கது.