states

மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றுவர கூடுதல் பேருந்துகளை இயக்குக!

சென்னை,நவ.19- மாணவர்கள் கல்வி நிலையம் சென்று வரும் நேரங்களில் கூடுதல் பேருந்தை இயக்கிட தமிழ்நாடு அரசை இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலி யுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க. நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது: தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் விபத்துக்குள்ளாவதை நாம் காண முடிகிறது, கடந்த மாதம் மதுரையில் பள்ளி மாணவர் ஒரு வருக்கு காலில் எலும்பு முறிந்தது, கடலூர் பெரியார் கல்லூரியை சேர்ந்த மாணவர் பேருந்து வராததால் அங்கு ஆட்டோவில் கூட்டம் நெரிசலில் சிக்கி விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை குன்றத்தூர் பேருந்தில் சென்ற 11ம் வகுப்பு பள்ளி மாணவர் பேருந்து கூட்ட நெரிசலில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த தால் விபத்துக்குள்ளாகி இரு கால்க ளும் அகற்றப்பட்டுள்ளது,  மற்றும் பல இடங்களில் மாணவர்கள் கீழே விழுந்து சில காயம் படக்கூடியதாக சூழ்நிலை ஏற்படுகிறது மாணவர்கள் தினசரி பேருந்து களில் பயணம் செய்யும்போது பல சிரமங்களை  சந்தித்து வரு கிறார்கள். பல இடங்களில் பேருந்து கள் வராமல் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாக்கின்றனர்,

கிராமப் புற மாவட்டங்களில் இருந்து நகர் பகுதிக்கு வருவதற்கு கூட சில நாட்கள் பேருந்துகள் இல்லாமல் மழைக் காலங்களில் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். மாணவர்கள் அதிகமாக இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் தூரமாக நின்று  பொது மக்கள் இறங்கியதும்  மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் பேருந்து வேக மாக செல்லும் நிலை பல மாவட்டங்க ளில் உள்ளது. கூட்ட நெரிசலில் மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாக்கின்றனர்.  எனவே மாணவர்களின்  நலன் கருதி பழுதடைந்துள்ள பேருந்து களை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுத்து, பள்ளி கல்லூரிகளுக்கு மாண வர்கள் சென்றுவரும் நேரங்களில் காலை மாலை என கூடுதல் பேருந்து இயக்கிடவும், இலவச பேருந்து பயண அட்டையின் கிலோமீட்டர் தூரத்தை 40 கிலோ மீட்டராக உயர்த்திட வேண்டும்.   மாணவர்கள் நடத்துநர் ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் இடையே நட்புணர்வு பேண பண்பாட்டு கலை நிகழ்வுகளை நடத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, படியில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் செல்வதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி விபத்துகளை தடுத்திட தமிழ்நாடு அரசையும், போக்குவரத்து துறையையும் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.