புதுதில்லி, ஜன. 28 - அயோத்தி கோவிலில் அமைய வுள்ள ராமர், சீதை சிலைகளை வடிப்ப தற்காக, நேபாளம் நாட்டிலிருந்து 2 பெரிய பாறைகள் கொண்டுவரப்படு கின்றன. நேபாள நாட்டு மக்கள் தாங்க ளாகவே முன்வந்து, இந்த பாறைகளை அனுப்பி வைக்க உள்ளதாக அந் நாட்டின் முன்னாள் பிரதமர் பிமலேந் திர நிதி தெரிவித்துள்ளார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். கோயிலின் முதல் தள பணிகள் இந்த ஆண்டு முடிவடைய உள்ளது.
கோயிலின் கீழ் தளத்தில் 160 தூண்க ளும், முதல் தளத்தில் 132 தூண்களும், 2-வது தளத்தில் 74 தூண்களும் அமைக் கப்படுகின்றன. மேலும் 5 மண்டபங்க ளும் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் கோயிலில் அமையும் ராமர், சீதை சிலை தயாரிப்பதற்காக நேபாளத்தில் கண்டகி நதிக்கரையில் இருந்து 2 பெரிய பாறைகளை நேபாளம் அனுப்ப உள்ளதாக நேபாளத்தின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி தெரிவித்துள்ளார். “நேபாளத்தை சேர்ந்த ஜனக் மன்னனின் மகள் சீதை என்று புராணங் கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமர் பிறந்த நாளையும், ராமர் - சீதை யின் திருமண நாளையும் ஜனக்பூர் மக்கள் கொண்டாடுகின்றனர். அயோத்தியுடன் எங்களுக்கு பல நூற் றாண்டுகள் பழமையான பந்தம் உள்ளது. எனவேதான் ராமர், சீதை சிலைகளுக்காக 2 பெரிய பாறைகளை அனுப்ப முடிவு செய்தோம். ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகளை கடந்த ஆண்டு சந்தித்தோம். பின்னர் கடந்த டிசம்பரில் நேபாள அரசிடம் இருந்து பாறைகளை அனுப்புவதற்காக அனு மதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து ராமர், சீதை சிலைகள் தயாரிக்க 18 டன் மற்றும் 12 டன் எடை கொண்ட 2 பெரிய பாறைகளை தேர்வு செய்தோம். அந்த பாறைகளுக்கு கடந்த 15-ஆம் தேதி முதல் பூஜைகள் செய்யப்பட்டு வரு கின்றன. இந்த பாறைகள் பிப்ரவரி 1-ஆம் தேதி அயோத்திக்கு கொண்டு செல்லப்படும். இதன்மூலம் நேபாளத்திற் கும் இந்தியாவிற்கும் இடையிலான மத உறவுகள் வலுப்படும்” என்று பிம லேந்திர நிதி கூறியுள்ளார்.