புதுதில்லி, ஜூன் 8- இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் பிற வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன் களுக்கான வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகி தம் (Repo Rate) எனப்படுகிறது. இந்த ரெப்போ விகிதங்களை, ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம். கொரோனாவின்போது மிக நீண்டகாலத் திற்கு 4 சதவிகிதம் என்ற அளவிலேயே இருந்த ரெப்போ விகிதம், 2022 மே 4 அன்று 40 அடிப்ப டைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 8, ஆகஸ்ட் 5, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளிலும் ரெப்போ விகிதம் தலா 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டன. இதேபோல 2022 டிசம்பர் 7 அன்று 35 அடிப்ப டைப் புள்ளிகளும், 2023 பிப்ரவரி 8 அன்று 25 புள்ளிகளும் ரெப்போ உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த ரெப்போ விகிதம் 6.50 சதவிகிதம் என்ற அளவை எட்டியது. இதனால், இந்தியாவில் சாமானியர்கள் மற்றும் நடுத்தர மக்கள் வாங்கிய வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை (EMI) பெரும் சுமையாக மாறின.
ஏப்ரல் 3 முதல் 6 வரை நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக்குழு கூட் டத்தில், இந்த ரெப்போ விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளி யாகின. ஆனால், ரெப்போ உயர்த்தப்பட வில்லை. அமெரிக்காவில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக, அங்கிருந்த ‘சில் வர்கேட் கேபிடல் கார்ப்பரேஷன்’, ‘சிலிக்கான் வேலி வங்கி’, ‘சிக்னேச்சர் வங்கி’, ‘கிரெடிட் சூயிஸ் குரூப்’, ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ என நான்கு அமெரிக்க வங்கிகள் திவாலாகிப் போகின. இதுதொடர்பான பயத்தால், ஏப்ரலில் இந்தியா வில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில்தான், தற்போது ஜூன் மாதத்தில் 6,7,8 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெற்ற நாணயக் கொள்கைக்குழு கூட்டத் திற்குப் பிறகு, இந்த முறையும் ரெப்போ விகிதம் உயர்த்தப்படாது 6.50 சதவிகிதமா கவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். “இந்தியாவில், கடந்த நிதியாண்டை விட, 2023 மார்ச் - ஏப்ரல் சில்லரைப் பணவீக்கம் குறைந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் சில்ல ரைப் பணவீக்கம் 6.7 சதவிகிதமாக இருந்தது. இருந்த போதிலும் மொத்தப் பணவீக்கம் அதன் இலக்கை விட அதிகமாகவே இருக்கிறது. எங்க ளின் கணிப்புப்படி, அது அப்படியே இருக் கும் மற்றும் 2023 - 24 நிதியாண்டில் 4 சதவிகி தத்திற்கும் அதிகமாக தொடரும்” என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் ஜிடிபி 6.5 சதவிகிதம்
மேலும், “பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது மற்றும் முந்தைய கணிப்பு களை எல்லாம் தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2022-23 ஆண்டில் 7.2 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டின் 7 சதவிகிதத்தை விட இது வலுவான காரணியாகும். இந்த அனைத்து விஷயங்களையும் கணக்கில் கொண்டு 2023-24 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவிகிதமாக இருக்கும். அதிக ரித்து வரும் பணவீக்கம், புவி அரசியல் பதற்றம், இறுக்கமடைந்து வரும் பொருளாதார நிலை மைகள் காரணமாக உலகப் பொருளாதார நட வடிக்கைகள் குறையும். முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சத விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதேபோல் இரண்டாம் காலாண்டில் 6.5 சதவிகிதம், மூன்றாம் காலாண்டில் 6 சதவிகி தம், நான்காம் காலாண்டில் 5.7 சதவிகிதம் என ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது. சில்லரைப் பணவீக்கமானது, முன்பு மதிப்பி டப்பட்ட 5.2 சதவிகிதத்திலிருந்து 2024 நிதி யாண்டில் 5.1 சதவிகிதமாகக் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 50 சதவிகித நோட்டு கள் வங்கிகளுக்குத் திரும்ப வந்துள்ளன. ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி வந்துள்ளது. இதில் 85 சதவிகிதம் டெபாசிட் செய்யப்பட்டதாகும். 500 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் எண்ணம் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதேபோல 1000 ரூபாய் நோட்டுகளை மீண் டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை. இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித் துள்ளார்.