states

img

பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்தால், எலெக்ட்ரிக் வாகனம் வாங்குங்கள்!

மக்களின் துயரத்தை கேலி செய்த பாஜக அமைச்சர்!

பனாஜி, ஏப்.9- பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்தால் அரசைக் குறை கூறுவதை விட்டு, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுங்கள் என்று கோவா அமைச்சர் நிலேஷ் கேப்ரல் பேசியுள்ளார். இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகபட்ச மாக மும்பையில் லிட்டருக்கு 120 ரூபாய் 51 காசுகளாகவும், இதேபோல டீசல் விலை 104 ரூபாய் 77 காசுகளாகவும் உயர்ந்துள்ளது. சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவதாக இல்லை. வரிகளைக் குறைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக் கையை அரசு கொஞ்சமும் கண்டுகொள்வ தாக இல்லை. இந்நிலையில், கோவா மாநிலம் பனாஜி யில் அம்மாநில பாஜக அமைச்சர் நிலேஷ் கேப்ரல் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.  அதில், “பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி யில் இருப்பதால் தடையின்றி மக்களுக்கு பெட்ரோல் - டீசல் கிடைக்கிறது. இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளின் நிலையை பார்க்க வேண்டும். பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்காக ஒன்றிய அரசை குறை கூறுவதை விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும், “தேவைப்பட்டால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை வாங்கிக் கொள்ளுங்கள்” என்றும் மக்களின் துய ரத்தைக் கேலி செய்துள்ளார்.